Wednesday, 13 January 2016

Honey

1.
தேன், சாப்பிடுவது எப்படி ?
எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக... என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதில்லை. எனவே, நல்ல தேனை எப்படிக் கண்டுபிடிப்பது... எப்படிச் சாப்பிடுவது? என்பது குறித்து சில தகவல்களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.
“தேன், பல மருத்துவ குணங்களைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீரைத்தான் விற்பனை செய்கிறார்கள். தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.
காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது.
‘ஓடைத்தேன்’ என்பதுதான் இருப்பதிலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன்கூடுகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது. இதில் ஏதேனும் பழத்தைப் போட்டுவைத்தால், 200 ஆண்டுகளுக்குக் கூட கெடாது. மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்துவதற்கு இந்தத் தேனைத்தான் பயன்படுத்துவர். மரங்களில் இருக்கும் தேன்கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன். பெரும்பாலும் கடைகளில் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன்தான். ஆனால், இதில் பொருட்களை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
தாம்பத்திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவிட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள்.
முகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்தபட்ட பிரச்னை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்து விடும்.
பலாப்பழமும் தேனும் கலந்து சாப்பிட முகம் பொலிவாகும். உடலில் நீர் அதிகமாக இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து.
சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.
வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.
வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது... ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்” என்ற அர்ஜுனன் நிறைவாக, “எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்.
- இ.ராஜவிபீஷிகா

2.
எது நல்ல தேன்?

ஆன்ட்டிபயாட்டிக் இல்லாத தேன் வகையைத்
திட்டவட்டமாகக் கண்டறிவது கடினம்தான்.

அதேநேரம் பசுமை அங்காடிகளில் கிடைக்கும்,
செயற்கை பதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாத
தேன் வகைகளை வாங்குவது நல்லது
என்கிறார்கள் நிபுணர்கள்.

கலப்படமில்லாத நல்ல தேனைத்
தேர்ந்தெடுப்பது எப்படி என ஆலோசனை
தருகிறார் வேளாண்-உணவு நிபுணர் பாமயன்:

தேனின் தரத்தைக் கண்டறிவதற்கு மிக
எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க
முடிகிற சோதனை: ஒரு பிளாட்டிங் பேப்பரில்
இரண்டு துளி தேனை விட்டுப் பார்ப்பது.
தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக்
காகிதத்திலும் தேனை விட்டுப் பார்க்கலாம்.

அப்படிச் செய்யும்போது தேன் அப்படியே
இருந்தால் நல்ல தேன், காகிதத்தால்
உறிஞ்சப்பட்டால் கலப்படத் தேன்.
அதேபோலக் கண்ணாடிக் குவளை ஒன்றில் ஒரு
தேக்கரண்டி தேனை மேலிருந்து ஊற்றினால்,
அது ஒரு கம்பியைப் போலக் கீழே இறங்கி
அடிப்பகுதியைத் தொட வேண்டும். மாறாக,
இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது
கலப்படத் தேன்.
தேனில் மூன்று வகைகள் உள்ளன:

முதலாவது கொம்புத் தேன். பாறைகள்,
மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள
பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்தத்
தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன்
கிடைக்கும். இதற்கு மருத்துவ மதிப்பு
குறைவு. இரண்டாவது பொந்துத் தேன்.

குகை, மரப்பொந்து போன்ற இருட்டான
இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது.
இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள்.

இந்தத் தேன் வகை மிதமான அளவு
கிடைக்கும். மருத்துவ மதிப்பும் மிதமான
அளவு உண்டு. மூன்றாவதாகக் கொசுத் தேன்
என்ற சிறிய தேனீ வகை உண்டு. இந்தத் தேன்
கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான்
மருத்துவ மதிப்பு அதிகம்.

தேனை எப்படி எடுத்தாலும், அதில் உள்ள
ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான்
நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
இதற்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

ஆனால், அப்படி இயற்கையாகப்
பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும்
என்பதால், தேனைச் சூடுபடுத்தி
விடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது
தேனின் இயல்புத்தன்மை மாறிவிடுகிறது.

அது மட்டுமல்லாமல் தேனைப் பெருமளவில்
உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள்
தேனைப் பதனப்படுத்தி விடுகிறார்கள்
(pasteurisation). இந்தச் செயல்முறையில்
தேனின் இயற்கையான சத்துகள் மாற்றத்துக்கு
உள்ளாகாமல் இருக்கும் என்று சொல்ல
முடியாது. வணிகரீதியான தேனை
வாங்கும்போது, இந்த அம்சங்களைக் கணக்கில்
எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment