Sunday 24 May 2020

Corona medicine

#மிக_மிக_அவசரம்...*

கோவை #E_S_I  #மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

*இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

  *அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

     *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

                *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள். உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

       *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

  *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

         *அதனால் குறைந்த பட்சம் இந்த பயனுள்ள பதிவை அனைத்து உலக நாடுகளிடமும் கொண்டு செல்லும் அந்த முயற்சியிலாது  அனைவரும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்....

Thursday 7 May 2020

vyagara

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்!

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:

தர்பூசணி

தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – 1 எலுமிச்சை – 3

தயாரிக்கும் முறை

தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.

பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை

சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பு

இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.

பக்கவிளைவுகள்

இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

Monday 4 May 2020

bank write off

*சட்டப்படி திருடுவது எப்படி?*

"சட்டப்படி" கடனா.... எப்படி?
ஊருக்கு  வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும். சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் ஒரு லட்சம் என வாங்கி விடுவார்கள். 100 ஏக்கரும் சேர்ந்து மொத்தம் ஒரு கோடிதான்.

பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்துவிடுவார்கள்.  இனி அந்த பகுதியில் ஏக்கர் 50 லட்சம் என்பது தான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.

பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை. 

100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருவதால் மீதி 99 ஏக்கர் விலையும் இனிமேல் ஏக்கர் 50 லட்சம்தான்.

அதாவது "சட்டப்படி" இந்த 99 ஏக்கர் பூமியின் வழிகாட்டு மதிப்பீடு 49 கோடி 50 லட்சம். 

இதன் அடிப்படையில் வங்கியில் கடன் கேட்டால் ஒரு கோடி மதிப்பு பூமிக்கு "சட்டப்படி" சுமார் 15 -20 கோடி ரூபாய் கடன் கிடைக்கும். 

பின்னர் "கட்ட முடியாத சூழ்நிலை" ஏற்பட்டால் கடன் வாங்கியவர்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு கோடி தான் நட்டம் மீதி 14 கோடி லாபம் தான்.

இந்த பூமியை வங்கி ஏலத்தில் விற்க போனால் மொத்த பூமியும் சேர்த்து வாங்கிய ஒரு கோடி விலை சொன்னாலும் வாங்க ஆள் வர மாட்டார்கள். 

அந்த நிறுவனத்தின் இதர சொத்துக்களும் "சட்டப்படி" இந்த நிலையில்தான் இருக்கும். எனவே கடனை மீட்க முடியாமல் போய்விடும். இதுதான் வராக்கடன்.

எல்லாமே ஆவணங்களின்படி சட்டப்படி சரியா இருக்கும். எனவே யாரையும் குற்றம்சாட்ட முடியாது.

நிலத்தை பார்வையிட செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் இந்த இடத்தில் இந்த விலை இல்லை என்று. 
இருந்தும் சட்டப்படி அரசின் வழிகாட்டி மதிப்புதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அப்புறம் என்ன Write Off தள்ளி வைப்புதான். இது போன்ற அர்த்தமற்ற இயந்திரத்தனமான கடன் வழங்கும்  செயல்பாடுகளை திருத்தி அமைத்தால் வராக்கடன் என்பது இருக்காது.
ஒரு writeoff கதை சொல்லட்டா சார்.  

ஒரு படத்தில் பொன்னம்பலம், "முதல்ல வாங்கோணும்... அப்புறம் தோண்டோணும்..." என்று சொல்வார். அப்படித்தான், கடனை writeoff செய்வது என்பது waiveoff செய்வதற்கு முதல்படி. 

அதிலும் பலகோடிகளில் கடன் வாங்கியவர்களை நிதானமாக வேறுவேறு நாடுகளுக்கு தப்பிக்க விட்டுவிட்டு, அங்கே நன்றாக செட்டில் ஆகவிட்டுவிட்டு பிறகு பொறுமையாக இந்த processஐ துவக்குவது இன்னும் அயோக்கியத்தனம். 

Writeoff செய்தபின் அந்தப் பிரச்சினை NCLT (National Companies Law Tribunal)க்கு போகும். அதில், சொத்துக்களை ஏலம் விடுவார்கள். எப்போதுமே கொடுக்க வேண்டிய கடனுக்கு நிகராக சொத்துகள் இருக்காது.

உதாரணத்துக்கு ஒரு கம்பனியின் 55 கோடி கடன்  writeoff செய்யப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். பின் NCLT அந்தக் கம்பனியின் சொத்துக்களை ஏலம்விடும். அதில்வரும் தொகையை வாங்கிக்கொண்டு கடன் முடிந்ததாக வங்கிகள் அறிவிக்கும். சொத்து 5கோடிக்கு ஏலம் போனாலே மிகப்பெரிய விஷயம்.  மிச்சம் 50 கோடி waiveoff, அதாவது தள்ளுபடி செய்யப்படும். மக்கள் பணத்துக்கு நாமம். 

இதிலும் ஆயிரம் தில்லுமுல்லுகள் நடக்கும்.  பலதடவை சொத்துகள் ஏலமே போகாது. மல்லய்யாவின் சொத்துகள் அப்படித்தான் கிடக்கிறது. ஏனெனில் கடனில் இருப்பவை பெரும்பாலும் மதிப்பில்லாத சொத்துகளாக இருக்கும். 
அதனால்தான் writeoffக்கும் waiveoffக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறோம்.

வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்களை அன்றாடம் பத்து முறை ஃபோனில் அழைத்தும், வீட்டுக்கு நேரில் வந்தும் டார்ச்சர் கொடுப்பார்களே வங்கிக்காரர்கள், அதெல்லாம் பெரும்பணக்காரர்களிடம் நடக்காது.  டிராஃபிக் போலீஸ் நம்மை நிப்பாட்டி, “ஃபைன் என்றால் 500ரூ. என்னிடம் கொடுப்பதாக இருந்தால் 100ரூ தான். என்ன பண்ணலாம்?” எனக் கேட்டு பேரத்தை முடிப்பார்களே அப்படித்தான் பெரும்பணக்காரர்களின் கடன்கள். அதிலும் மத்திய அரசு இதில் எக்ஸ்பர்ட். இல்லையென்றால் 50ஆண்டுகளாக சீனில் இருக்கும் காங்கிரசைவிட பாஜக பணக்கார கட்சி ஆகமுடியுமா என்ன? 

வாங்கும் சொற்ப சம்பளத்தில் வரியையும் கட்டிவிட்டு, வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் GSTயும் கட்டிவிட்டு பின் கொரானா காலத்தில் Pmcaresக்கும் படியளக்கிறோமே.. அதெல்லாம் எதற்கு தெரியுமா?  தந்தையார் தன் மகனைப்பார்த்து நீ ஊர் சுற்றுதற்குதான் லாயக்கு என்று வெறியாய் கத்துவாரே...  அப்படிதான்நீரவ் மோடியும், மல்லய்யாவும் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதற்குதான் . 

அதனால் writeoff வேறு waiveoff வேறு என்றெல்லாம் எங்களுக்கு பொருளாதார வகுப்பெடுக்காதீர்கள் சங்கிகளே... டீமானடைசேஷன் பண்ணால் கருப்பு பணம் ஒழியும், கள்ளப்பணம் ஒழியும், நாட்டில் தேனும் பாலும் ஓடும் என நம்பிய மக்கு பசங்க தான நீங்க? அப்படி பின்னாடி போய் பெஞ்சு மேல நில்லுங்க...

*படித்ததில் பிடிக்காதது...*