Friday 29 January 2016

Garlic and cough

பூண்டு சளி தொல்லையில் இருந்து மட்டுமின்றி, காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்ற வலி, பாம்பு கடி போன்றவற்றை குணமாக்கவும் உதவும். மேலும் ஆய்வு ஒன்றிலும் பூண்டில் உள்ள மருத்துவ குணத்தால் குடல், புரோஸ்டேட், நுரையீரல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும் என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் தன்மைகள் தான் காரணம். சரி, இப்போது சளி தொல்லையில் இருந்து நிவாரணம் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்பட பூண்டை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

பூண்டு :-

சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். மேலும் அக்காலத்தில் சளி பிரச்சனைக்கு இந்த பூண்டு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.

பூண்டு மற்றும் தேன் :-

பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்

பூண்டு மற்றும் தண்ணீர்:-

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸ் :-

ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு டீ :-

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
பூண்டு மற்றும் தக்காளி:-

2-3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். இச்செயலை சளி நீங்கும் வரை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

பூண்டு சூப் :-

மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 -3 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

Short stories

1.
A poor boy loved a rich girl.

One day the boy proposed her. Then the girl said, "listen! your monthly salary is my daily hand expenses. Should I be involved with you? How could you thought that? I will never love you. So, forget me 'n get engaged with someone else of your level."
But somehow the boy could not forget her so easily.
10 years later.

One day they became face to face in a shopping center. The lady said, "Hey! you! How are you? Now I'm married. Do you know how much is my husband's salary? Rs. 2 lac per month! Can you imagine? 'n he is also very smart."
The guy's eyes got wet with tear by hearing those words.
After few minutes her husband came before the lady could say something to the guy, her husband started to say by seeing the guy.

"Sir! You here? Meet my wife." Then he said to her wife, "I'm going to assist a project of sir, which is of Rs. 200 crore. 'n do u know a fact? Sir loved a girl but he didn't get her. That's why still he is unmarried. How much lucky the girl was. Isn't it? Now a days who can love like that way?"

Moral : Life is not so short. So, don't be so proud of yourself and damn others. Situations change with time. Every one should respect other's love.

2.
Amazing story : (y)

He Was A Poor Guy😊 With Big Dream , A Dream To make His Daughter👸 A Best Doctor💉 .
Her Daughter Was A Cute Princess👸 & It Was Her Higher School Result Day😕 , As He Wished His Daughter Was State Topper🙌 .
Father - I am Very Happy Dear😘 , Whatever U Ask I will Buy U Today😊 .
Daughter - Pa , I Want That Dress👗 Which I Showed U That Day But it Was 2000rs💸 So I Didn't Ask U Will u Plz Buy That For me😃 .
Father - OK Dear☺ , But ( All his Savings Was Not Enough To Buy That Dress , He Needed 300rs More ) Somehow He Gifted Her The Dresses👗 She Asked For😃 .
Mother - From where Did U Got This Much Money😕😢 .
Father - My Savings☺ & I Sold My Blood For Extra Money💸 . I Don't Want My Daughter To Get Disappointed😢😢 .
It Was Her Final Year It was the Last Step To Become A Doctor💉 . But She Needed 80,000 For Her Fees💸 . Somehow Her Father Managed To pay the Fees☺ .
Mother - From Where are U bringing this much Money😕😟 , Did u Robbed Any Bank😨 .
Father - No The Guy I Sold My Blood That Day☺ Was a Kidney Failure Patient😞 , Today I Sold My Kidney For Him😃 . I Didn't Robbed Any Bank😊 & Don't Tell This To My Daughter She will Feel Guilty😢 .
It Was The Day All Were Expecting😊 , Her Father Expected Her Daughter To Enter Home as A Doctor💉😃 .
But
She Came As A Dead Body😢 . She Killed Herself Because She was Cheated By a Guy She Luvd😢😢 .
Now Tell Me Who's Actually Dead😢😢 .
Yes Luv💜 Is Everything But If U Lost It Just Take a Deep Breath😢 & Think About Ur Parents👫 .
Ur Luv May Get Another Boy/Girl👰👨 ,
But
Ur Parents Won't Get Another Prince/ Princess👰👨 .
Dont read alone...
(y) (y) (y) (y) (y)

3.
Worth a read!

Paradigm Shift:-

Imagine you're in a Airport. While you're waiting for your
flight, you notice a kiosk selling shortbread cookies.
You buy a box, put them in your travelling bag and then you patiently search for an available seat so you can sit down and enjoy your cookies. Finally you find a seat next to a gentleman.
You reach down into your travelling bag and pull out
your box of shortbread cookies. As you do so, you notice that the gentleman starts watching you intensely.
He stares as you open the box and his eyes follow your hand as you pick up the cookie and bring it to your mouth. Just then he reaches over and takes one of your cookies from the box, and eats it! You're more than a little surprised at this.
Actually, you're at a loss for words. Not only does he take one cookie, but he alternates with you. For every one cookie you
take, he takes one.
Now, what's your immediate impression of this guy? Crazy? Greedy? He's got
some nerve!
Can you imagine the words you might use to describe this man to your associates back at the office?
Meanwhile, you both continue eating
the cookies until there's just one left. To your surprise, the man reaches
over and takes it.
But then he does something unexpected. He breaks it in
half, and gives half to you.
After he's finished with his half he gets up, and without a word, he leaves.
You think to yourself, "Did this really happen?" You're left sitting there dumbfounded and still hungry. So you go back to the kiosk and buy another
box of cookies.
You then return to your seat and begin opening your new
box of cookies when suddenly you glance down into your travelling bag.
Sitting there in your bag is your original box of cookies.........still
Unopened.
Only then do you realize that when you reached down earlier, you had reached into the other man's bag, and grabbed his box of cookies by mistake.
Now what do you think of the man? Generous? Tolerant? You've just experienced a profound paradigm shift. You're seeing things from a new point of view.
Is it time to change your point of view? Now, think of this story as it relates to your life.
Seeing things from a new point of view can be very
enlightening. Think outside the box. Don't settle for the status quo. Be open to suggestions. Things may not be what they seem.
Unless and until, one realizes about the fact, no one will change his or her view of thinking in spite of lot of external factors.
Every Point has THREE Sides; Your Side, My Side and The Right Side.
To understand either the Other's Side or the Right Side, one needs to leave
His Side.

Eye sight School Pondicherry

Fகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

தங்கும் விடுதி குறித்த த
கவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
use/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
.
அருமையான தகவல் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள்.

Thursday 28 January 2016

Tamil generations

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலைமுறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

Monday 25 January 2016

Facts

தெரிந்து கொள்வோம்:-

1.
--------------------------------
* வெங்காயம் நறுக்கும் பொழுது, சுயிங் கம் மென்றால் கண்களில் நீர் வருவதை தவிர்க்கலாம்.
* ரொட்டிகளில் (bread) ,மனித முடி உள்ளது. L-cysteine எனப்படும் அமினோ-அமிலம் பேக்கிங் தொழிற்சாலைகளில் மாவைப் பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. இது மனித ரோமங்களில் அதிகமாக காணப்படுவதால், அதிக அளவில் ரோமங்களிலிருந்தே எடுக்கப்படுகிறது.
* ஒரு கோப்பை கேழ்வரகு (கேப்பை) கூழ் தயாரிக்க ஆகும் செலவு அதிக பட்சம் ரூபாய் பத்து. இது நம் இதயத்தைப் பாதுகாக்கவும், இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைத்து தொடர்ந்து கட்டுப்படுத்தவும், மேலும் பல சமநிலைகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
* பச்சை வெங்காயத்தை உண்பதினால் உடல் உறுதி (stamina) அதிகரிக்கிறது.
* மிளகு பலவிதமான விஷங்களை முறிக்கும் ஆற்றலுடையது.
* பாதி வேக வைத்த உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு முக்கியத் தேவையான பல தனிமங்கள் உள்ளது.
* தக்காளியில் வைட்டமின் B6 உள்ளது. பச்சைத் (சமைக்காத) தக்காளிப் பழங்களைக் காலையில் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உலகிலேயே வெப்பமான கோடை காலத்தை உடைய நாடுகளில் ஒன்றாக இருந்தும் கூட, ஐஸ் க்ரீம் (பனிக்கூழ்) சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவான நாடாக இந்தியா உள்ளது, ஆச்சரியத்தக்கது என்று கருதுகின்றனர்.
* ஆப்பிள் தண்ணீரில் மிதக்கும். ஏனெனில் அதில் 25 சதவிகிதம் காற்று உள்ளது.
* 7500க்கும் அதிகமான ஆப்பிள் வகைகள் உலகில் பயிர் செய்யப் படுகின்றன. தினமும் ஒரு ஆப்பிள் வகையாக உண்டு சோதித்தால், மொத்த வகையையும் உண்ண உங்களுக்கு 20 ஆண்டுகள் தேவைப்படும்.
* உலகிலேயே மிக விலை அதிகமான பழம், ஜப்பானின் "யுபாரி கேண்டலோப்" ( Yubari
cantaloupe) ஆகும். ஒரு முறை, இரண்டு பழங்கள் சேர்த்து 23,500 டாலருக்கு ஏலத்தில் விலை போனதாம்.
* உலகில் தினமும் உற்பத்தி செய்யப்படும் உணவில் பாதி அளவு வீணாக்கப் படுகிறது.
* கெட்டுப் போகாத ஒரே உணவு தேன் தான். 3000 வருடங்களுக்கும் மேல் கெடாமல் இருக்கும். (தேன் என்பது தேனீக்கள் எடுக்கும் வாந்தியே)
* உலகில் இதுவரை அதிகம் திருடப்பட்ட உணவு பாலாடை.
* ஆதியில் கேரட்டின் நிறம் ஊதாவாக இருந்தது.
* பீநட் பட்டர் (peanut butter) என்று அழைக்கப்படும், வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணையை வைத்து விஞ்ஞானிகளால் வைரங்களை உருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
* டைனமைட்டுகள், வேர்க்கடலைகளை வைத்து தயாரிக்கப்படுகின்றன.
* ஆகாய விமானத்தில் உணவு அவ்வளவாக உசிக்காது. காரணம், நம் நுகர்வு சக்தியும், சுவைக்கும் சக்தியும், 20 முதல் 50 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது.
* நெருக்கடியான நேரத்தில் ( உடலில் நீழப்பை சமன் செய்ய ) இளநீரை நேரடியாக நாளங்கள் மூலம் ரத்தத்தில் செலுத்தலாம். இளநீர் அவ்வளவு தூய்மையானது. விபத்தில் விழுந்த பற்களை உடனடியாக இளநீரில் போட்டு வைத்தால், அவற்றை மீண்டும் பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், இளநீரில் அவ்வளவு சுலபமாக பாக்டீரியா அண்டாது.
* வாழைப்பழங்கள், இப்பொழுதுள்ளவை போலல்லாமல், முன்பு, குட்டையாகவும், நிறைய விதைகளுள்ளவையாகவும், அதிக ஈரப்பதமில்லாதவையாகவும் இருந்துள்ளன. (படத்தினைப் பார்க்கவும்)

2.
தெரிந்துகொள்வோம்
* ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.
* நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.
* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.
* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.
* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.
* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.
* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.
* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.
* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.
* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.
* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.
* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.
* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.
* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.
* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.
* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.
* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!

2
--------------
கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப் படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பாதிக்கு மேல் தண்ணீர் விட்டுக் குலுக்கினால் சுத்தமாகிவிடும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? அரைத்த மாவில்இருந்து கொஞ்சம் கிள்ளி தண்ணீரில் போடுங்கள். சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும்; கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும்; மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.
தக்காளி சட்னி செய்யும்போது. எள்ளை வறுத்துப் பொடித்துப் போட்டு அரைத்தால், மணம் தூக்கலாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
வயிற்றுப் புண் உள்ள வர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியை குடித்தால், நிவாரணம் கிடைக்கும்
காரக்குழம்பு செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால், சிறிது தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால்.. காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.
பொங்கல் செய்யும்போது முழு மிளகை போடுவதால் பலரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க, மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து பொங்கலில் போட்டுக் கிளறிவிடலாம்!
கை நகங்களுக்குக் கீழே கருமை நிறம் ஏறியிருப்பவர்கள், தேங்காய் எண்ணெயுடன் சந்தனப் பொடியைச் சேர்த்து கைகளில் தினமும் பூசி வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
காலிஃப்ளவரை பயன்படுத்தியதும், இலையைத் தூக்கி எறியாமல், எண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து... இதனுடன் உப்பு, வதக்கிய இலை சேர்த்து துவையல் அரைக்கலாம். இது சுவையும், சத்தும் மிக்கது.
போண்டா அல்லது வடைக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டால், மாவை வழித்து பாத்திரத்தில் வைத்து, அதில் ஒரு கைப்பிடி ரவையைத் தூவிக் கலந்து, சற்று நேரம் ஊறவைத்து எடுத்தால், மாவு கெட்டியாகி இருக்கும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடையோ, போண்டாவோ செய்யும்போது மொறுமொறு என்று இருப்பதுடன், எண்ணெயும் அதிகம் குடிக்காது.

______ ________________________    ____

4.

14 Most Amazing Interesting Facts (y) :

1. Most soccer players run 7 miles in a game.

2.The only 2 animals that can see behind itself without turning its head are the rabbit and the parrot.

3. It cost 7 million dollars to build the Titanic and 200 million to make a film about it.

4. Every time you sneeze some of your brain cells die.

5. Your left lung is smaller than your right lung to make room for your heart.

6. Laughing lowers levels of stress hormones and strengthens the immune system. Six-year-olds laugh an average of 300 times a day. Adults only laugh 15 to 100 times a day.

7. Chewing gum while peeling onions will keep you from crying.

8. The Boeing 747 is capable of flying upside-down if it weren’t for the fact that the wings would shear off when trying to roll it over.

9. Never hold your nose and cover your mouth when sneezing, as it can blow out your eyeballs.

10. In ancient Greece, children of wealthy families were dipped in olive oil at birth to keep them hairless throughout their lives.

11. You can actually sharpen the blades on a pencil sharpener by wrapping your pencils in aluminum foil before inserting them.

12. 14 newborns baby will be given to the wrong parents daily.

13. 160 cars can drive side by side on the Monumental Axis in Brazil, the world’s widest road.

14. A cockroach can live several weeks with its head cut off.
(y) (y) (y) (y) (y)  :) :) :) :)

Some medicines

Hi1.
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

11. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்

2.
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.
சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.
நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.
நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.
தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்.
பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும்.
சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.
அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.
துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும்.
குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.
அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும்.
தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும்.
அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.
இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும்.
மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும்.
ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும்.
மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும்.
பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.
இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.
வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.
தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும்.
நீர்கோவை விலகும்.

3.

இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்

* உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

* துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

* காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

* தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

* அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.

3

சித்த மருத்துவம்
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.