Sunday 29 November 2015

Hot water- benefits

#வெந்நீரின்மகத்தும்


#நெஞ்சு_எரிச்சல்_போகணுமா?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
#சதை_குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)
#உடம்பு_வலிக்கிறதா?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
#கால்_பாதங்கள்_வலிக்கிறதா?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
#மூக்கு_அடைப்பா?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
#தரையை_துடைக்கும் போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
#திடீரென்று_கடுமையான_தலை_வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
#சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்’
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசி

Saturday 28 November 2015

Natural farming

இயற்கை விவசாயி வைரக்கண்ணு  ( ஆண்டு வருமானம் 13 லட்சம்  8 ஏக்கர் )

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்

புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது.  

அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''

-இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'ஜீரோ பட்ஜெட் பிதாமகன்' சுபாஷ் பாலேக்கர்... போன்ற வேளாண் ஆர்வலர்களும், விவசாயப் பொருளியல் நிபுணர்களும் இப்படித்தான் வலியுறுத்திக் கொண்டுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்' எனும் இந்தக் கோட்பாடு, இடையில் பசுமைப் புரட்சி காரணமாக கரைய ஆரம்பித்தாலும்... தற்போது மீண்டும் வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக லாபம் பார்க்கும் விவசாயிகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சிவிக்காடு-அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த வைரக்கண்ணு.

''சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துலயும் கால்நடை வளர்ப்புலயும் அதிக ஆர்வம். பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு விவசாயத்தைப் பாக்க வந்துட்டேன். கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு அனுபவங்களை ஏற்படுத்திக்கிட்டு... சம்பாதிச்சதுலதான் இப்போ, எட்டு ஏக்கர்ல ஒருங்கிணைந்தப் பண்ணையத்தை உருவாக்கி இருக்குறேன். ரெண்டு ஏக்கர்ல தென்னை, ரெண்டு ஏக்கர்ல கோ-4, ஒரு ஏக்கர்ல தீவனச் சோளம் இருக்கு. மூணு ஏக்கர்ல வழக்கமா இரு போகம் நெல் போடுவேன். அதே நிலத்துல கோடையில ஒரு போகம் சோளம், நிலக்கடலை, எள்ளு, உளுந்துனு போட்டு எடுத்துடுவேன்.

தென்னந்தோப்புக்கு உள்ளயே தனித்தனியா கொட்டகை போட்டு, அதுல 500 நாட்டுக்கோழி, 15 ஆடு, 50 ஜோடிப் புறா, 10 முயல், 9 மாடுங்கனு வளர்த்துட்டு இருக்கேன். இதில்லாம, 15 வாத்துகளும் இருக்கு. வேலி ஓரத்துல சூபாபுல், கிளரிசீடியா, கல்யாணமுருங்கை, வேம்பு, ஒதியன், நுணா மரங்கள் இருக்கு. பக்கத்துல இருக்குற பஞ்சாயத்துக்குச் சொந்தமான ரெண்டு குளத்தைக் குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்த்துட்டு இருக்கேன்'' என்று தன்னுடைய ஒருங்கிணைந்தப் பண்ணை பற்றிய முன்னுரையைக் கொடுத்த வைரக்கண்ணு, பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார்.

களை எடுக்கும் கால்நடைகள்!

''தென்னந்தோப்புல மரங்களுக்கு இடையில களைகளை எடுக்கறதுக்காக உழவெல்லாம் ஓட்டுறதில்லை. தண்ணியையும் தாராளமா கொடுக்கறதில்லை. பத்து நாளைக்கு ஒரு தடவைனு காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தண்ணி பாய்ச்சுவேன். இப்படிச் செய்றதால... தென்னையோட சல்லி வேர்கள் அழுகாம இருக்கும். மண்ணும் இறுகாம இருக்கும். களைகள், புல் பூண்டுகளை... கோழி, வாத்து, ஆடு, மாடுகள் சாப்பிட்டுடும். இந்தச் செடிகளை அறுத்து, முயலுக்கும் கொடுப்போம். ஆடு, மாடுகள் மேயுறதால, அதுகளோட கழிவுகள் தோப்புல விழுந்து, மண் நல்ல வளமா இருக்கு. ஏகப்பட்ட மண்புழுக்களும் இருக்கு. அதனால, தென்னைக்கு எந்த ஊட்டமும் கொடுக்காமலே செழிப்பா இருக்கு.

கழிவிலிருந்து உரம்!

கால்நடைக் கழிவுகள், இலை தழைகள் எல்லாத்தையும் வெச்சு, வருஷத்துக்கு 3 டன் மண்புழு உரம் தயாரிக்குறோம். ரொம்ப வருஷமா ஒரு தென்னை மரம் சரியா காய்க்காம இருந்துச்சு. அதை வெட்டிடலாமானுகூட யோசிச்சுட்டு இருந்தோம். அந்த சமயத்துல யதார்த்தமா அந்த மரத்துக்குப் பக்கத்துல மண்புழு உரம் தயாரிக்க படுகை போட்டோம். கொஞ்ச நாள்லயே அந்த மரம் அருமையா காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. அதனால, இங்க வெள்ளாமை வைக்கிற எல்லா பயிர்களுக்கும் இதைத்தான் உரமா போடுறோம். அதோட பஞ்சகவயாவையும் தெளிச்சு விடுவோம். வேற எந்த ஊட்டத்தையும் பயன்படுத்துறதில்லை.

செலவைக் குறைக்கும் மாட்டு வண்டி!

ரெண்டு வண்டி மாடுகள், ஏழு கலப்பினப் பசுக்கள் இருக்கு. சூபாபுல், தீவனச் சோளம், கிளரிசீடியா, கோ-4, சோளத்தட்டைஎல்லாத்தையும்கலந்து, ஒரு மாட்டுக்கு தினமும்7 கிலோ அளவுக்கு பசுந்தீவனம் கொடுக்குறோம். வண்டி மாடு இருக்குறதால போக்குவரத்துச் செலவும் அதிகமா இருக்கறதில்லை. எப்பவும் 3 மாடு கறவையில இருக்கும். தினமும் 20 லிட்டருக்குக் குறையாம பால் கிடைக்குது'' என்ற வைரக்கண்ணு, கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.

மேய்ச்சல் முறையில் நாட்டுக் கோழிகள்!

''தாய்க்கோழியா 90 பெட்டைகள், 10 சேவல்கள் இருக்கு. இதில்லாம, வெளியில இருந்து வாங்கின 400 நாட்டுக் கோழிக்குஞ்சுகளும் இருக்கு. ஒருநாள் வயசுள்ள குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். குஞ்சுகளுக்கு ஒரு மாசம் வரைக்கும் கம்பெனி தீவனம் வாங்கிப் போடுவோம். அதுக்கப்பறம், நாங்களே தயாரிக்குற தீவனத்தைக் கொடுத்துடுவோம். ஒருநாள் வயசுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு கோழிக்கு ரெண்டரை கிலோ தீவனம் கொடுக்க வேண்டியிருக்கும். வருஷத்துக்கு இதுமாதிரி 1,400 குஞ்சுகளை வளர்த்து வித்துட்டு இருக்கேன். எங்ககிட்ட இருக்குற கோழிகள் மூலமா கிடைக்கிற குஞ்சுகளையும் இதேபோல வளர்த்து விற்பனை செய்றோம். நாட்டுக்கோழி முட்டைகளையும் தனியா விற்பனை செய்றோம். கோழிகள் இங்கேயே மேய்ஞ்சுடும். இருந்தாலும், தினமும் அரிசி, குருணை, தவிடு எல்லாத்தையும் கலந்து போடுவோம். அப்பதான் நாம கூப்பிட்டா கோழிகள் ஓடி வரும்'' என்று சொல்லிக்கொண்டே... தீவனத்தை அள்ளி வீசிய வைரக்கண்ணு ஆடு, முயல், வாத்து ஆகிய வற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

பரணில் ஆடுகள்... கூண்டில் முயல்கள்!

''ஜமுனாபாரி ரகத்துல 2 கிடாவும், 6 பெட்டையும் இருக்கு. நாட்டு ஆடுகள்ல 3 பெட்டையும், 4 குட்டிகளும் இருக்கு. நாட்டு ஆடுகளோட, ஜமுனாபாரி கிடாவை இனச்சேர்க்கை செய்யும்போது தரமான குட்டிங்க கிடைக்குது. ஜமுனாபாரி ஆடுகளை பரண் அமைச்சு வளர்க்குறோம். ஆடுகளுக்கு எங்க தோட்டத்துல கிடைக்கிற பசுந்தீவனத்தையே கொடுத்துடுவோம். ஆடுகள் மூலமா கிடைக்கிற குட்டிகளை, எட்டு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். ஜமுனாபாரி ஆடுகளை நாட்டு ஆடுகளோடு கலக்காம விற்பனை செய்றதால... நல்ல விலை கிடைக்குது.

கூண்டு முறையில 8 பெட்டை முயல் களையும், 2 ஆண் முயல்களையும் வளர்க் கிறோம். இங்க விளையுற பசுந்தீவனங்களைத் தான் முயல்களுக்கு கொடுக்கிறோம். ஒவ்வொரு முறையும் குட்டி போட்டதும் ஆணோட சேர விடாம ஒரு மாசத்துக்கு பெட்டைகளைப் பிரிச்சு வெச்சுடுவோம். அப்பதான் முயல்கள் ஆரோக்கியமா இருக்கும். வருஷத்துக்கு மொத்தமா 240 குட்டிகள் கிடைக்குது. இதை மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம்.

வாத்துகள்ல 3 ஆண், 12 பெண் இருக்கு. ஒரு வாத்து, வருஷத்துக்கு 270 முட்டைகள் இடும். உடைஞ்சு சேதாரமானது போக, இதுல 200 முட்டைகள் தேறும். அப்படி பார்த்தா... வருஷத்துக்கு 2 ஆயிரத்து 400 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை 5 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். பகல் நேரங்கள்ல வாத்துகளை மீன் குளத்துல விட்டுட்டா... பாசி, புழுக்களை எல்லாம் சாப்பிட்டுடும். வாத்தோட கழிவுகள், மீன்களுக்கு உணவாகிடும். வாத்துக்கும், முயலுக்கும் எங்களுக்கு தீவனச் செலவே கிடையாது. அதனால, இந்த ரெண்டு மூலமா கிடைக்கிறது எல்லாமே லாபம்தான்!

நாட்டுப் புறாவுல 50 ஜோடி இருக்கு. இது மூலமா வருஷத்துக்கு 1,000 குஞ்சுகள் கிடைக்கும். இதுல 800 குஞ்சுகள் தேறும். இதையெல்லாம் மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். புறாக் களுக்கு பொட்டுக்கடலை, கம்பு, பச்சைப் பயறு எல்லாம் கலந்து தீவனமா கொடுப் போம்'' என்ற வைரக்கண்ணு, அடுத்து போய் நின்றது... மீன்குளத்தில்!

''ஒரு ஏக்கர் பரப்புல ஒண்ணு, ரெண்டு ஏக்கர் பரப்புல ஒண்ணுனு மொத்தம் ரெண்டு குளம் இருக்கு. பிறந்து ஒருநாள் ஆன, 1 லட்சம் மீன்குஞ்சுகள வாங்கிட்டு வந்து, ஒரு குட்டையில விட்டு 2 மாசம் வளர்க்கணும். விரல் அளவுக்கு வளந்ததும், அதுகள குளத்துல விட்டுடுவோம். 1 லட்சம் குஞ்சுகளுக்கும் சேர்த்து, 15 நாள் வரைக்கும் தினமும் அரை கிலோ கடலைப் பிண்ணாக்கை தீவனமா கொடுப்போம். அடுத்த 45 நாளைக்கு, தினமும் ஒரு கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஒரு கிலோ எண்ணெய் எடுத்த தவிடு ரெண்டையும் கலந்து போடுவோம். ரெண்டு மாசம் கழிச்சு பார்த்தா... 20 ஆயிரம் குஞ்சுகள் தேறும். இதுல 9 ஆயிரம் குஞ்சுகளை மட்டும் மூணு ஏக்கர் குளத்துலயும் விட்டுட்டு, மீதியை விற்பனை செஞ்சுடுவோம்.

குளத்துல வளர்ற குஞ்சுகளுக்கு சோயா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு எல்லாத்தையும் கலந்து களி மாதிரி வேகவெச்சு தீவனமா கொடுப்போம். ஒரு ஏக்கர் குளத்துக்கு முதல் ஒரு மாசத்துல தினம் ஒரு கிலோ; 2-ம் மாசம் தினம் 2 கிலோ; 3-ம் மாசம் தினம் 3 கிலோனு தீவனம் கொடுக்கணும். 4-ம் மாசத்துல இருந்து 8-ம் மாசம் வரைக்கும் தினம் 4 கிலோ அளவுக்கு தீவனம் கொடுப்போம். தீவனத்தை நைலான் சாக்குல, மூட்டையா கட்டி, அதுல மூணு துளை போட்டு, தண்ணீரோட மேற்பரப்புல இருக்குற மாதிரி தொங்க விட்டுடுவோம். கூடவே, தினமும் 2 கிலோ கோழி எச்சத் தையும் சாக்குல கட்டி தொங்க விடுவோம்.

எட்டு மாசம் கழிச்சு, தவளை, ஆமை இதெல்லாம் பிடிச்சு சாப்பிட்டது... தானாகவே செத்துப் போனது... வளர்ச்சி அடையாததுனு மீன்குஞ்சுகள்ல இழப்பு வரும். இதெல்லாம் போக, 3 ஏக்கர் குளத்துக்கும் சேர்த்து மொத்தமா 5 ஆயிரம் மீன்கள் கிடைக்கும். ஒரு மீன் முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை இருக்கும். எடை கணக்குல சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு மீன்கள் கிடைக்கும். வியாபாரிகளே குளத்தை தேடிவந்து, மீனைப் பிடிச்சு எடை போட்டு, கிலோ 100 ரூபாய்னு எடுதுக்குறாங்க'' என்ற வைரக்கண்ணு நிறைவுப் பகுதிக்கு வந்தார்.

''விவசாயம், கால்நடைனு ஒண்ணைச் சார்ந்து, ஒண்ணை வெச்சுருக்குறதால... செலவு குறையுது. ஒண்ணோட கழிவு இன்னொண்ணுக்கு உணவாயிடுது. பசுந் தீவனங்கள் இருக்கறதால தீவனச் செலவு குறைஞ்சுடுது. குறிப்பா... வாத்து, முயலுக் கெல்லாம் தீவனச் செலவே இல்லாம வருமானம் மட்டும் வந்துட்டே இருக்குது. இந்த எட்டு ஏக்கர் ஒருங்கிணைந்தப் பண்ணையம் மூலமா வருஷத்துக்கு 13 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்குது'' என்று கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாட சொன்ன வைரக்கண்ணு,

''கொஞ்சம் மெனக்கெட்டா... கண்டிப்பா நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்கிறதுக்கு நானே நல்ல உதாரணம்தானே'' என்று கேட்டு புன்னகைத்தார்!

Thursday 26 November 2015

Sprouted grains

முளை கட்டிய தானிய உணவு.....
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள்.
அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும்.
இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு.
இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம்.
காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
மூட்டுவலி தீரும்.
எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

Friday 20 November 2015

Rat, cockroaches, lizard, bee, bedbug

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....

பிறரும் இந்த விபரங்களை தெரிந்து கொள்ள அதிகம் பகிருங்கள்.

யாம் பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டும்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.

கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

#எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.

எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

#பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?

அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.

இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

#ஈ
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.

அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.

இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.

இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

#கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.

மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.

இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

#கரப்பான்_பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.

அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

#மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

Sitting: benefits

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்.....

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது,
நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.
எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால்,
இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...
எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...
சாப்பிடும் முறை...!
1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி.
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க.
கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள்
சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
அமருங்கள் சம்மணமிட்டு...
சாப்பிடுங்கள் முறையாக...
வாழுங்கள் ஆரோக்கியமாக.....