Thursday 28 April 2016

Mouth ulcers

குன்மதிற்கு கைகண்ட மருந்து

நல்லெண்ணெய் - 100 மி.லி
கரிசாலை சாறு - 100 மி.லி
அதிமதுரம் - 1 தேக்கரண்டி

மேற்சொன்ன இரண்டையும் சேர்த்து அடுப்பிலேற்றி கொதிக்க வைத்து மெழுகு பதம் வந்த உடன் அதிமதுரம் அதில் தூவி கலக்கி இறகிவிடவேண்டும்.

அவ்வளவு தான் மருந்து.

அளவு : 1 தேக்கரண்டி காலை மற்றும் இரவு

தீரும் நோய்கள் : வாயிலிருந்து ஆசைவாய் வரை உள்ள புண்கள் குணமாகும்.

Original thiruneeru

எங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் ?
திருவீழி மழலை கோசாலை , விழுப்புரம் கோசாலை , மதுராந்தகம் கோசாலை போன்ற பல்வேறு கோசாலைகளில் மற்றும் நிறைய இடங்களில் வேத முறைப்படி தயாரித்த பசுஞ்சாண திருநீறு கிடைகின்றன.
மேலும் , விலாசங்கள் சேகரித்த வகையில் கீழ்கண்ட இடங்களில் தொடர்பு கொண்டு சுத்தமான திருநீறு நீங்கள் பெறலாம் !
●▬▬▬▬▬▬●
1 ) களக்காடு - திருநெல்வேலி - Sri Shivalinga Vibhuthi, Surandai, Kalakkadu, Thirunelveli District. Contact Sri K. Muthukrishnar, Mob : 093610 10678.
●▬▬▬▬▬▬●
2 ) கூடலூர் - காஞ்சிபுரம் - Govindan Goshala, Gudalur Village, near Madurantakam, Kanchipuram district. Run by Sree Krishna Charitable Trust. www.goseva.net - Contact Sri T Radhakrishnan, Mob: 98400 41151
●▬▬▬▬▬▬●
3 ) திருவீழிமிழலை - திருவாரூர் - Go Rakshana Samiti, Thiruveezhimizhalai village, Kudavasal Taluk, Tiruvarur districtwww.gorakshana.org - Contact: Sri Guruprasad: Mob :94444 11772
●▬▬▬▬▬▬●
4 ) பாண்டிச்சேரி - Sri Viswanathaswami Devasthanam (affiliated to Sri Kanchi Kamkoti Peetam Sankara Matam) Vanjiyur Village, T.R Pattinam Commune, Karaikal District, Pondicherry. Mob : 04368 224822
●▬▬▬▬▬▬●
5 ) பனம்பட்டு - விழுப்புரம் - Sri Kanchi Kamakoti Peetadhipathi Sri Chandrasekharen
dra Saraswathi Swamigal Memorial Goshala Panambattu Village, Near Villupuram. Contact: Sri Sundaresan Mob :90037 70645
●▬▬▬▬▬▬●
6 ) ஊர்குடி - திருவண்ணாமலை - Sree Goshala - Oorkudi village between Vandavasi and Thiruvannamalai. Contact: Sri Rajendran Mob :+91 99623 55712
●▬▬▬▬▬▬●
7 ) கருப்பூர் - கும்பகோணம் - Thirucherai Goshala - Karuppur - Near Nachiyar Koil, Kumbakonam. Contact: Sri Sampath Mob :+91 76390 72602
●▬▬▬▬▬▬●
8 ) நெட்ட வேலாம்பாளையம் - திருச்செங்கோடு - Subhashree Gousala, Nettavelampayalam, Anangur Post, Tiruchengode Taluk. Contact: Sri Sankar Mob :+91 98433 38299
●▬▬▬▬▬▬●
9 )திண்டுக்கல் - Sri Vaitheeswaran, Dindigul. Contact Mob :+91 90252 51072, http://
thirumoolarvibuthi.blogspot.in/
●▬▬▬▬▬▬●
10 ) அச்சரப்பாக்கம் - காஞ்சிபுரம் - Sri Bala Veda Patasala, Acharapakkam, Kanchipuram district. http://balavedapatasala.hpage.in/ - Sri R Balakrishnan Mob :+91 98409 12762
●▬▬▬▬▬▬●
11 )ஆத்தூர் - காஞ்சிபுரம் - Chaturveda Vidya Ganapathi Vedashram Veda Patasala, Athur Village, Kanchipuram district. http://
athurvedapatasala.hpage.in/ . Sri R Kamakoti: Mob :+91 9884 402624
●▬▬▬▬▬▬●
12 ) அசோக் நகர் சென்னை - Shree Krishna Charitable Trust ,New no 14(old no 11),16th Avenue,Ashok Nagar,Chennai 600083.. Ph:044 24899926.-
Their GOSHALA at 68,Goodalur Village, Madurantakam Taluk, Kancheepuram dist, Contact person:Mr. T.Radhakrishnan B.Com , ACA. Mob :098400 41151., Email:rk@goseva
.net
http://sadhanandaswamigal.blogspot.in/

Friday 15 April 2016

Useful natural medicines


இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
__________________________________________
விஷம் இறங்க...

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும்.

பெண்கள் இடுப்பில் புண் குணமாக...

பெண்கள் இடுப்பில் புடவை கட்டும் இடத்தில் இறுக்கி கட்டுவதால் ஏற்படும் புண் கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்.

குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க...

முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றினால், வயிற்று உப்பிசம், மலக்கட்டு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

வெட்டுக்காயம் குணமாக...

இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

ஆரம்ப கர்ப்ப சிதைவை தடுக்க...

கர்ப்ப தாய்மார்கள் அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

Salt

1980 ஆரம்பமாயிற்று அயோடின் கலந்த உப்பு சாப்பிடாததே தைராய்டு நோய்க்கு காரணம் என அரசாங்கம் ஊடகங்கள் வழியாக கூக்குரல் இட்டது ஏதோ மக்கள் நலன் சார்ந்து இல்லை அது ஒரு சில மருந்துகம்பெனி முதலாளிகளின் நலனுக்காக என்பதை இப்போது உணரலாம்

1980 களின் துவக்கத்தில் இந்தியாவில் தைராய்டு குறைபாடுகள் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவு,அயோடின் கலந்த உப்பை உண்ட இந்திய மக்களுக்கு 40% வரை தைராய்டு குறைபாடுகள் இன்று,ஆண் பெண் பேதமின்றி, உப்பிலிருந்த சத்துக்களை பிரித்து அயோடின் கலந்த உப்பை கொடுத்து மக்களை நோயாளிகளாக்கி...

அரசாங்கம் என்பது மக்கள் நலன் சார்ந்தது இல்லை அது தனியார் முதலாளிகள் நலன் சார்ந்தவை என்பது இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்

சுத்திகரிக்கபடாத கல் உப்பை பயன்படுத்துங்கள் குறைவான அளவில் மேலும் இரும்பு சட்டியில் உப்பை வருத்து பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் .

உப்பிலிருந்து தான் வேதியியல் என்கின்ற விஞ்ஞானம் தொடக்கம் பெருகிறது

"உப்பை கட்டதெரியாதவன் துப்பு கெட்டவன்"என்ற சொல் வழக்கு உண்டு சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவனுக்கு அரிச்சுவடி அதாவது உப்பிலிருக்கும் குளோரைடு நீக்கி(Na+) ஆக உருவாக்குவது என்பதையே அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தேவர்களும் அசூரர்களும் பால்கடலை கடைந்து 'தேவாமிர்தம்' எடுத்தனர் என்பதன் உட்கரு இது வாக தான் இருக்க கூடும் மண் மலை களிலிருந்து அடித்து கொண்டு கடலில் சேர்க்கபடும் கடல் நீரில் சுமார் 350 வேதியியல் சேர்மானங்கள் உள்ளது என்று சித்தர்களின் பாடல்களில் உள்ளதை உற்று நோக்கினால் அந்த வேதியியல் அணுக்களை அயனிகளாக மாற்றி உடலுக்கு எடுத்து கொண்டதையே பால் கடலை கடைந்து தேவாமிர்தம் என்ற கற்பமருந்தாக கருதியிருக்க்கூடும், உப்பில் அவ்வளவு உலோகங்கள் அணு வடிவில் உள்ளது அதை அயனியாக்க மாற்றியதையே"தேவாமிர்தம்" என் கருதுகிறேன் இது என்னோட கருத்து

உப்பும் தமிழர் பண்பாட்டு கூறுகளும்

1.செய்த வேளைக்கு மாற்றாக நெல்லும்(சம்பாநெல்)உப்பும்(அளத்தில் விளைந்தது) கொடுத்த வழகத்தினால் தான்'சம்பளம்' என்ற சொல் பிறந்தது
salt என்கின்ற சொல்லில் இருந்து ஆங்கிலத்தில் Salary என்ற சொல் பிறந்தது.
2. உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாயாகவும் கருதபடுகிறது "உப்பிட்டவரை உள்ளவும் நினை" என்பது உப்பு நியாபகத்தின் குறியீடாகவும் , நன்றி மறந்ததை காட்டும் வழக்கு மொழி . நவீன அறிவியல் மூளையின் வளர்ச்சிக்கு உப்பில் உள்ள சோடியம் பொட்டாசியம் அவசியம் என கருதுவது உப்பின் தன்மையை தான் .
3. உப்பு உறவின் நீட்சியாக கருதுவதுண்டு இறந்தவருக்கு பத்தாவது நாள் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமானது இறந்தவரின் தொடர்பை அறுத்து கொள்ளவே இதை செய்கின்றனர் .
4. மதுரை மாவட்ட கள்ளர் இனத்தின் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும் போது மணமகன் வீட்டில் இருந்து உப்பும் அரிசியையும் கொண்டு செல்லும் வழக்கம் உண்டு

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மையுடையதால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும்,கல்மரவை எனப்படும் மாக்கால் சட்டியிலும் பயன் படுத்தும் வழக்கம் உண்டு.
உப்பு என்ற தமிழ்சொல்லுக்கு 'சுவை' என்பதே முதல் பொருள் இனிப்பு, கசப்பு,துவர்ப்பு என்ற சுவைகளெல்லாம் உப்பை அடிப்படையாக கொண்டே பிறந்தவை
இது போல உப்புடன் தொடர்புடைய பல தரவுகளை மேற்கோள் காட்டலாம்
-Chellam Selva

பின்னூட்டம்(FeedBack)
Kanagaraj Easwaran உப்பு மாற்றுவது என்ற சடங்கு திருமணம் உறுதியாவதைக்குறிக்க எமது கொங்கு நாட்டிலும் உண்டு.

அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்தால் அயோடின் பற்றாக்குறை அதிகமாகிறது. சரியாவதில்லை என்பதே உண்மை. இதைப்பிரச்சாரம் செய்வது அலோபதி டாக்டர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் உப்பு மிகத்தப்பு. அதை சாப்பிடவேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை. இயற்கையாக பச்சையாகப்பழங்களை காய்கறிகளை சாப்பிட்டால் அவற்றில் உள்ள உப்புக்களே போதும்.

உப்பு அமிர்தம் என்பது அபத்தம். லவனம் எனப்படும் உப்பு அசுரத்தன்மையே கொண்டது. உப்புதான் சிலேத்துமம் என்னும் சளியைக்கெட்டி செய்து படிப்படியாக மனிதனைக்கொல்லுகிறது. அமிர்தம் என்பது தேன் ஆகும். உப்பு சாப்பிடாமல் இயற்கை உணவுகளை உண்டால் பாம்பு கடித்தால் கூட விஷம் ஏறுவதில்லை என்று இயற்கை மருத்துவர் தேங்காய் பழ சாமியார் இராமகிருஷ்ணன்(சிவசைலம்) அனுபவப்பூர்வமாக கண்டறிந்திருக்கிறார்.

Discussion Forum
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

Tuesday 12 April 2016

Urine test

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,

முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,

எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

Friday 8 April 2016

Bath- Why?

குளியல் !
--------------

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... ! நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

நலம் நம் கையில்

நன்றி

Thursday 7 April 2016

Curry leaves- Eating raw

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

கொழுப்புக்கள் கரையும் :-

காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை :-

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் :-

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய் :-

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் :-

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி :-

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம் :-

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு நீங்கும் :-

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

Sunday 3 April 2016

Pranayam

திருமந்திரமும் , பிராணாயாமமும் !!!
------------------------------------

( தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம். )

திருமந்திரம் என்னும் நூல் தமிழ் ஆகமம்.
ஆகமம் என்றால் வேதம் என்று பொருள். இந்த
நூலை திருமூலர் என்னும் தவயோகி
இயற்றியுள்ளார். மக்கள் வாழும் முறை
மற்றும் கடவுளை காணும் முறையை
அறிவியல் பூர்வமாக இயற்றியுள்ளார்.

திருமூலர் அஷ்டமா சித்திகள் பெற்ற
தவயோகி ஆவார். அவர் இந்த நூலில் மக்கள்
நூறு வயது முதல் மூவாயிரம் வருடம் வரை
உயிருடன் வாழும் வழிகளை கூறியுள்ளார்.

மந்திரம் :
மூலன் உறை செய்த மூவாயிரம் தமிழ்.
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.

பொருள் :
திருமூலர் ஆகிய நான் உலக மக்களின்
நன்மைக்காக மூவாயிரம் மந்திரங்களை
(பாட்டு) கடவுள் அருளால் இயற்றியுள்ளேன்.

காலையில் எழுந்து கருத்தை அறிந்து
படித்தால் கடவுளை அடையலாம்.
ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும்
திருமூலரின் புத்தகங்கள் இருப்பது அவசியம்.
திருமூலர் உடம்பை வளர்க்கும் மற்றும்
அறிவை வளர்க்கும் முறைகளை பற்றி
எழுதியுள்ளார். திருமூலரின் வரலாற்றை
கூறிய பின் அவருடைய மந்திரங்களையும்
அவற்றின் பொருளையும் கூறுவேன்.

முன்னுரை :
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

பொருள் :
உடம்பு அழிந்தால் உயிர் அழிந்து விடும்.
உடம்பில் நோய் இருந்தால் தெளிவாக சிந்திக்க
முடியாது. ஏதாவது வேலையை ஏற்றுக்
கொண்டால் சரிவர செய்ய இயலாது. ஆகவே
உடம்பை வளர்க்கும் முறையை அறிந்துக்
கொண்ட நான் உடம்பை சரியாகப் பேணி
பாதுகாத்து உயிரையும் வளர்க்கிறேன்.

மந்திரம் :
உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்
டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புக்கின் றேனே.

பொருள் :
இதற்கு முன்பு உடல் தேவையற்றது என்று
நினைத்திருந்தேன்.உடம்பிலே உயிராகிய
கடவுள் இருப்பதைக் கண்டேன். ஆகவே
உடலை இப்போது பேணிப் பாதுக்காத்து
வருகின்றேன்.
உடலினை வளர்த்த திருமூலர் பிராணாயாமம்
மற்றும் ஆசனத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

நான் பிராணாயாமம் பற்றி மட்டும்
கூறுகிறேன்.
பிராணாயாமம் : பிராணாயாமம் என்பது மூச்சு
பயிற்சி.

பிராணாயாமத்தின் பயன்கள் :
1. தினமும் செய்தால் வியாதிகள் வராது.
2. ஆரோக்கியமாக இருக்கலாம்.
3. கொழுப்பைக் குறைக்கும்.
4. ஆயுளை அதிகரிக்கும்.
5. நினைவாற்றலை அதிகரிக்கும்.
6. தலைவலி வராது.
7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு,
மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும்.
8. இரத்தநாளங்கள் சுத்தமாகும்.
9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை
அதிகரிக்கும்.
10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும்.
11. குரல் இனிமையாகும்.
12. மலம், ஜலம் குறையும்.
13. இரத்த அழுத்தம் குறையும்.
14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது.
15. பசி குறையும். தாகம் குறையும்.
16. சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
17. தேவையற்ற தூக்கம் குறையும்.
18. எவ்வளவு கடினமான வேலையை
செய்தாலும் எளிதில் சோர்வடையாமல்
செய்யலாம்.
19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும்
சக்தி ஏற்படும்.
20. மூச்சுக்காற்றை சீராக்கும்.
21. நுரையீரலில் காற்றினால் ஏற்படும்
மாசுக்களைக் கட்டுபடுத்தும்.
22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற
பிராணவாயு இதனால் அதிகரிக்கும்.
23. ஆகவே பிராணாயாமம் பயிற்சி
செய்பவர்கள் 7 மணிநேரம் தூங்கினால்
போதும். 8 மணி நேரம் தூங்க
வேண்டியதில்லை. சிறிது நேரம்
தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த
சுறுசுறுப்பு ஏற்படும்.

மந்திரம் :
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்து அதுவிட்டளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

பொருள் :
எங்கு இருந்தாலும் மூச்சைப் பிடித்து
பிராணாயாமம் செய்தால் உடம்பிற்கு(ஆக்கை)
அழிவில்லை. மூச்சை முடிந்த அளவு
இழுத்துப் பிடித்து வெளியே விட்டால்
தலைவனாகலாம். வாழ்க்கையில்
முன்னேறலாம். மற்றவர்கள் போற்றுவார்கள்.

மந்திரம் :
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

பொருள் :
பறவையை விட வேகமாக செல்ல கூடிய
குதிரை போன்ற மூச்சை அடக்கினால் போதை
பொருட்களை குடிக்கத் தேவையில்லை. நாம்
சுறுசுறுப்பாக துள்ளி நடக்கலாம். சோம்பல்
ஏற்படாது. உண்மையை சொல்கிறேன் சூடு,
சொரணை இருந்தால் கேட்டுக் கொள்.

மந்திரம் :
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.

பொருள் :
இஷ்டபடி வெளியில் வருகின்ற மூச்சுக்
காற்றை முறைப்படி பிராணாயாமம் பயிற்சி
மூலம் மூச்சை முறைப்படித்தினால்
உறுப்புகள் புத்துணர்வு பெற்றுச் சிவக்கும்.
தலைமுடிக் கறுப்பாகும். பிராணாயாமம்
பயிற்சி செய்யும் வரை உடம்பிலிருந்து உயிர்
பிரிந்து செல்லாது.

மந்திரம் :
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.

பொருள் :
இடப்பக்கமும், வலப்பக்கமும் மூச்சு பயிற்சி
மாற்றி மாற்றி பயிற்சி செய்து தலைவராகலாம்
என்று அறிந்தவர்கள் யாரும் இல்லை. மூச்சுப்
பெயர்ச்சி செய்து ஒளி வடிவில் கடவுளைக்
காணலாம். மூச்சுப்பெயர்ச்சி செய்து
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தலாம்.
ஆகவே இதன் மூலம் நூறு வயது வரை
நோய் நொடியின்றி இளமையுடன் வாழலாம்
என்று திருமூலர்க் கூறியுள்ளார்.

பிராணாயாமம் செய்யும் முறை :
**********************************

பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள் :
1. காற்றோட்டமான இடமாக இருக்க
வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில்
செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி
பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை
கொல்வதை போல் மனிதனையும் கொன்று
விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி
பாதுகாக்கவும்.

தகுதியான நேரம் :
*******************
1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும்.
முடியாவிட்டால் மாலையில் அல்லது
காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்து
செய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி
நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம் கழித்து
சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம்
செய்யக் கூடாது.

தகுதியான ஆசனம் :
*********************
பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது
நல்லது. அப்படி இல்லையெனில்
சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்.
மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது.

பூரகம் : மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல்.

ரச்சகம் : மூச்சை வெளியே விடுதல்.

உள்கும்பகம் : மூச்சை உள்ளே நிறுத்தி
வைத்தல்.

வெளிகும்பகம் : மூச்சு காற்று உள்ளே
இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல்.
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும்,
வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய
வேண்டும்.

பந்தம் :

மூலபந்தம் :
*************
மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும்,
பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது.
சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை
குதிகாலால் அழுத்திக் கொள்ளவும்.
மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும்
உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும்.

மூலபந்தத்தின் பயன்கள் :
**************************
1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத
பசி குறையும்.
2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும்
சீராக வேலை செய்யும்.
3. இளமைக் குறையாது.
இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய
வேண்டும்.

ஜலந்தர்பந்தம் :
****************
தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே
சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக
அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம்
ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம்
செய்வதற்கு முன் நிறுத்தவும்.

ஒட்டியானபந்தம் :
*******************
வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி
இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும்
போது செய்து பூரகம் செய்வதற்கு முன்
நிறுத்தவும்.

பிராணாயாமம் முறைகள் :

நாடிசுத்தி :
**********
புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு
மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது
மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம்
வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.
அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு
வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே
விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக
உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக
வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றி
மாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி
கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற
அவசியமில்லை. இதை செய்ய
தேவையில்லையென்றால் இதற்கு அடுத்தப்
பயிற்சி செய்யவேண்டும்.
அனுலோம் ,விலோம் :
இடதுமூக்கை மூடிவிட்டு வலதுமூக்கால்
மூச்சை மெதுவாக ஒரே சீராக மூச்சை
உள்ளே இழுக்கவும். பிறகு இரண்டுபக்க
மூக்கையும் மூடிக்கொள்ளவும். முடிந்த
அளவு மூச்சை உள்ளே வைத்துக்கொண்டு
வலதுபக்கம் வழியாக வெளிவிடவும்.
அடுத்து வலது மூக்கை மூடி இடது
மூக்கால் மூச்சை இழுக்கவும். பின்னர்
கும்பகம் செய்து வலது மூக்கால்
வெளிவிடவும். இவ்வாறு மூக்கை மாற்றி
மாற்றி பயிற்சி செய்யவும். முதலில் சிறிதுக்
காலத்திற்கு 5 முறை செய்ய வேண்டும்.
பிறகு இருபது முதல் முப்பது முறை
செய்யலாம். முதலில் 1 விநாடி பூரகம்
செய்து 2 விநாடி கும்பகம் செய்து பின்னர் 2
விநாடி ரச்சகம் செய்யவும். பிறகு சிறிது
சிறிதாகக் கூட்டிக் கொண்டு சென்று 5:20:10
என்ற கணக்கிற்கு பண்ணலாம்.இதில்
இன்னொரு முறையும் உண்டு. வெளிகும்பக
முறையில் 5:10:20 என்ற கணக்கிற்கு
பண்ணலாம். வெளிக்கும்பக முறை
அதிகபலனை தரும். இப்படி செய்வதினால்
1. நுரையீரலில் உள்ள நோய்கள் குறையும்.
2. இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்

உள்கும்பக முறை :
********************
1:2:2 ஆரம்ப நிலை 1 விநாடி மூச்சை உள்ளே
இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக்
கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:10:10
இரண்டுமாதம் கழித்து 5 விநாடிகள் மூச்சை
உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக்
கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:20:10 5 விநாடிகள் மூச்சை உள்ளே
இழுத்துக் கொள்ளவும்.
20 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக்
கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.

வெளிகும்பக முறை :
***********************
1:2:2 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக்
கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி
வைத்துக் கொள்ளவும்.
5:10:10 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக்
கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி
வைத்துக் கொள்ளவும்.
5:10:20 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக்
கொள்ளவும்.
10 விநாடிகள் விநாடிகள் மூச்சை வெளியில்
விடவும்.
20 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி
வைத்துக் கொள்ளவும்.

கபால ஜொலிப்பு :
*******************
இந்த பிராணாயாமம் செய்வதால் கபாலம்
துடிக்கும். பத்மாசனம் அல்லது
சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை
மூடிக்கொள்ளவும். கண்களை
மூடிக்கொள்ளவும். பூரகம் ரச்சகத்தில்
செய்யவும். இப்பயிற்சியில் கும்பகம்
கிடையாது. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு ஒரு
முறை பூரகம் ரச்சகம் செய்யவும்.
படிபடியாக உயர்த்திக்கொண்டு சென்று ஒரு
விநாடிக்கு பத்து முறை வரை பூரகம் ரச்சகம்
செய்யவும். வியர்த்துக் கொட்டும் வரை
இப்பயிற்சி செய்யவும்.

பயன்கள் :
***********
1. சுவாச குழாய் சுத்தமாகும்.
2. ஆஷ்துமா குணமாகும்.
3. காச நோய் வராது.
4. ரத்தம் சுத்தமடையும்.

உஜவி :
********
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து
கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும்.
இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை
இழுத்துக் கொள்ளவும். முடிந்த அளவு
உள்ளே கும்பகம் செய்து வலது மூக்கை
மூடிக்கொண்டு இடது மூக்கு வழியாக
காற்றை வெளியே விடவும். மூச்சை உள்ளே
இழுக்கும் போது மார்பை விரிக்கவும்.
மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரே சீராக
இழுக்கவும்.

சீக்காரி :
*********
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில்
அமர்ந்துக் கொள்ளவும். நாக்கை மேலே
மடித்துக் கொள்ளவும். வாயை திறந்து ஷ்ஷ்
சத்தம் போட்டுக்கொண்டு மூச்சை வாய்
வழியாக இழுக்கவும். முடிந்த வரை
அதிகநேரம் கும்பகம் செய்து இரண்டு மூக்கு
வழியாக ரச்சகம் செய்யவும்.

பயன்கள் :
***********
1. தாகம் குறையும்.
2. சோம்பல் குறையும்.
3. தூக்கம் போய்விடும்.

சீத்தாளி :
**********
பத்மாசனம் அல்லது சித்தாசனம் அல்லது
வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். அதன்
பிறகு நாக்கை வாய் வெளியே நீட்டிக்
கொள்ளவும். அதன்பிறகு காற்றை நாக்கு
வழியாக உள்ளே இழுத்து முடிந்த வரை
கும்பகம் செய்து பின்பு ரச்சகம் செய்யவும்.

பயன்கள் :
***********
1. கட்டி, மஞ்சள் காமாலை, தோல்வியாதிகள்
நீங்கும்.
2. தாகம் குறையும்.
3. கோபம் குறையும்.

பஷ்திரிகா :
************
பஷ்திரிகா என்பது கபாலமும், உஜவியும்
சேர்ந்து செய்வதாகும். கும்பக முறையில்
செய்யாமல் 5 லிருந்து 10 முறை வேகமாக
மூச்சை வேகமாக இழுத்து வெளிவிடவும்.
பின்னர் உஜவி முறையில் காற்றை இழுத்து
முடிந்த அளவு கும்பகம் செய்து பின்னர்
ரச்சகம் செய்யவும். கோடை காலங்களில் ஒரு
முறை செய்யவும். குளிர் காலங்களில்
இரண்டு முறை செய்யவும். முதலில் 5
விநாடிக்கு கும்பகம் செய்து பின்னர்
படிப்படியாக நான்கு நிமிடம் வரை கும்பக
நேரத்தை கூட்டவும்.

பயன்கள் :
***********
குளிர்க்காலங்களில் போர்வை இல்லாமல்
இப்பயிற்சி மூலம் உடம்பை சூடாக்கிக்
கொள்ளலாம்.

வண்டு பிராணாயாமம் :
************************
வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும்.
மூச்சை வேகமாக இழுக்கவும். பின்னர்
தொண்டையிலிருந்து குறட்டை விடும் போது
வெளிவரும் சத்தம் போல், வண்டு சத்தம்
போடுவது போல் மூச்சை மெதுவாக
வெளியே விடவும்.

முடிவுரை:
************
பிராணாயாமம் செய்யும் போது மனதை
ஒருமுக படுத்தி செய்தால் அதிக பலன்
கிடைக்கும். ஆகவே கண்களை மூடி ஓம்
அல்லது ஓம் மஹா கணபதி நமக என்று
மந்திரங்களை கூறிக் கொள்ளலாம்
.

உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.

எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில் ப்
மனதை இயக்குவது மூச்சுக்
காற்று (பிராணன்).

*இந்த மூச்சுக்
காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே
மனம்
ஒருமுகப்படும்.

* இறைவனைப் பற்றிக்
கொண்டு மெய்ஞ் ஞான வழியில்
செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு
கட்டுப்படும்.

* பொய்ஞானம் எனும் மாயைகளில்
சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு,
மனம், ஐம்பொறிகள், பருவுடல்
ஆகிய எதுவுமே வசப்படாது.
முக்தி நிலையும்
இவர்களுக்கு சாத்தியப்படாது.
குருவின் துணை
நாம் பிறந்தது முதல்
இறப்பது வரையில்
ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றைப் புதிதாகக்
கற்றுக்கொள்கிறோம். பல
விஷயங்களைப் பிறர் சொல்லிக்
கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம்.

சிலவற்றை பிறரைப் பார்த்துக்
கற்றுக்கொள்கி றோம். இவை தவிர
சிலவற்றை இயற்கையை உற்று
நோக்கியும்கூட
கற்றுக்கொள்கிறோம். புதிதாக
ஒன்றைக் கற்றுத்தரும்
ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!

கல்விக்கு குருவின் துணை மிக
அவசியம். அதைவிடவும் ஞானத்
தேடலில்- ஞானம் தேடிய
பயணத்தில் ஒரு குரு மிக மிக
அவசியம். பிராணா யாமம் எனும்
மூச்சுப் பயிற்சியை முறையாகக்
கற்றுக்கொள்ள
ஒரு குரு கட்டாயமாகத் தேவை.
இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல்
வலியுறுத்துகிறது.

"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார்
இல்லை
கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
(திருமந்திரம்)

"மனம்' என்பதை "ஆரியன்' என்ற
சொல்லால் திருமூலர்
குறிப்பிடுகிறார். இந்த
மனமானது மிக நல்லதாம். இந்த
மனதிடம் இரண்டு குதிரைகள்
உள்ளதாம். முதல் பாடலில்
ஒரு குதிரை உண்டு எனக் கூறிய
திருமூலர் அடுத்த
பாடலிலேயே இரண்டு குதிரைகள்
உள்ளதாகக் கூறுகிறாரே,
இது என்ன முரண்பாடு என்ற
கேள்வி எழுகிற தல்லவா?
இங்கேதான் மூச்சு குறித்த
அடுத்த சூட்சும ரகசியம்
பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் "குதிரை'
என்பது மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்கிறது. இந்தப் பாடலில்
அது நமது இடது நாசி,
வலது நாசி ஆகிய இரண்டையும்
குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம்.
இதுவே இரண்டு குதிரைகள்.

அல்லது இடது நாசி வழியாகச்
செல்லும் மூச்சுக்
காற்றை ஒரு குதிரை எனவும்,
வலது நாசி வழியாகச் செல்லும்
மூச்சுக்
காற்றை மற்றொரு குதிரை எனவும்
பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே?

வலது நாசியில் செல்லும்
மூச்சுக்கும், இடது நாசியில்
செல்லும் மூச்சுக்கும்
வித்தியாசம் இருக்க
முடியுமா என்ற கேள்வி உங்கள்
மனதில்
இப்போது எழுந்திருக்கும். ஆம்;
இரண்டு நாசிகளிலும் செல்லும்
மூச்சுக் காற்றுக்கு தனித்தனித்
தன்மைகளும், செயல்பாடுகளும்
உள்ளன. எனவேதான் திருமூலர்
அதைப் பாகுபடுத்திக் காட்ட
இரண்டு குதிரைகள் என்றார்.

நாம் நமது இரண்டு நாசித்
துவாரங்களின் வழியாகவும்
ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக
ஒரு தவறான
கருத்து நம்மிடையே உள்ளது.

உங்களது சுவாசத்தை உற்றுக்
கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள
உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின்
வழியாகவே அதிகப்படியான
காற்று உள்ளே செல்லும். (அடுத்த
நாசியில் மிகச் சிறய அளவிலான
காற்று உட்புகும்.)
சற்று நேரத்திற்குப்பின்
(இரண்டு மணி நேரத்திற்குப் பின்)
அடுத்த நாசி வழியாக
காற்று செல்லத் துவங்கும்.

இவ்வாறு ஒரு நாளில்
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என
மொத்தம் 12 முறை இந்த இடம்
மாறுதல் நடைபெறும். எந்த
நேரத்தில் எந்த நாசியில்
காற்று செல்லும் என்பதையும் நம்
முன்னோர் கள்
கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி
----------
காலை 6-8
மணி வரை வலது நாசி.
காலை 8-10
மணி வரை இடது நாசி.
காலை 10-12
மணி வரை வலது நாசி.
மதியம் 12-2
மணி வரை இடது நாசி.
மதியம் 2-4 மணி வரை வலது நாசி.
மாலை 4-6
மணி வரை இடது நாசி.
மாலை 6-8
மணி வரை வலது நாசி.
இரவு 8-10 மணி வரை இடது நாசி.
இரவு 10-12
மணி வரை வலது நாசி.
இரவு 12-2 மணி வரை இடது நாசி.
இரவு 2-4 மணி வரை வலது நாசி.
அதிகாலை 4-6
மணி வரை இடது நாசி.

வலது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சூரிய கலை என்றும்;
இடது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சந்திர கலை என்றும்
நமது முன்னோர்கள் பெயர்
சூட்டியுள்ளனர். இந்த
இரண்டு சுவாசங்களுக் கும்
தனித்தனிப் பண்புகளும்
வெவ்வேறு வகையான
செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)
***********************************
* உடலுக்குத் தேவையான வெப்ப
சக்தியைத் தருகின்ற பிராணன்
இதுவே.

* வலது நாசியின் வழியாக
சுவாசம் நடைபெறும்
காலகட்டத்தில் உடலின் வெப்ப
நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்;
சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக
இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில்
நிதானம் குறைவாகவும், வேகம்
அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)
***********************************
* உடலைக் குளிர்விக்கும்
தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த
மூச்சுக் காற்றும்
குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம்
நடைபெறும் வேளையில் உடலின்
வெப்ப நிலை சற்றே குறைந்து,
உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து,
மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத்
தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத்
துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து,
நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான
மூச்சுகளையும்
(குதிரைகளையும்) அடக்கி ஆளக்
கற்றுக் கொண்டால், மனம்,
ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய
அனைத்துமே நம்
கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால்
இவற்றை அடக்கும் சூட்சுமம்
எவருக்கும்
தெரிவதில்லை என்பதையே இந்தப்
பாடலின்
இரண்டாவது வரி தெரிவிக்கிறது.
"வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம்,
வழிமுறை) அறிவார் இல்லை.'
இந்த சூட்சுமங்களைக்
கற்றுக்கொண்டு, பிராணன் எனும்
குதிரைகளை வசப்படுத்த
ஒரு குருவின்
துணை வேண்டும். அந்த
குருவும்
நுண்ணறிவு படைத்தவராக, அந்தக்
கலையில் முழுமை பெற்றவராக
இருத்தல் வேண்டும். இந்தக்
கருத்தே கடைசி இரு வரிகளில்
வெளிப் படுகிறது.

"கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
இதில் "அருள் பெற்றால்' என்ற
சொற்களிலும் ஒரு சூட்சுமம்
உள்ளது. குருவிடம்
சென்று கற்றுக்கொள்வது வேறு;
அவரது அருளைப்
பெறுவதென்பது வேறு.
நீங்களே இதை ஆழமாகச்
சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள
சூட்சும ரகசியங்கள் புரியும