Monday 23 October 2017

Who is healthy

அனவைருக்கும்....பயனுள்ள பதிவு.

நீங்கள் ஆரோக்கியசாலி என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா?இல்லையா? எப்படி தெரிந்துக்கொள்வது? "மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது "சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவரை, "நீ நோயாளிதான்" என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் "தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது "அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்யத்
தூண்டுவது. நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்.
(most affected victims)

நன்கு படித்தவர்கள்....(?),
பணம் படைத்தவர்கள் ....(double income),
புகழடைந்தவர்கள்.
எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
சிறுநீரக நோய் ரீடிங் 1.02, கொழுப்பு அளவு,
உப்பு அளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சிலஅளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம். இத்தகய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".
Our Body mechanism is beyond சயின்ஸ்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.
https://www.facebook.com/groups/siddhar.science

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது.*
*"யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது"* .

உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள *மனிதனும்,வெவ்வேறு தட்பவெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவுபழக்கம், வெவ்வேறு உணவு உண்ணும் முறை, வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு "ஜீன்கட்டமைப்பில் இருக்கிறான்*.

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்", என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது"எப்பேற்பட்ட"முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் "Master check-up" இந்த நூற்றாண்டின் "மாபெரும் வியாபார மோசடி".

அப்படியானால் ஒரு மனிதன் ஆரோக்யமாக இருப்பது, இல்லாதது, எப்படி தெரிந்துக் கொள்வது? வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.
4. தரமான தாம்பத்ய உறவு.

"தரம்" என்ன என்பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன நான்கும் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்யாமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.....நன்றி.

சிந்திப்பவர் மட்டுமே தெளிவு பெறுவர்
https://www.facebook.com/groups/siddhar.science

Sunday 22 October 2017

Chuku copy

தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு பொடிக்கு…
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!