Wednesday 31 March 2021

thyroid

தைராய்டு குணமாக ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்

தேவையான மூலப்பொருட்கள்

1.தண்ணீர் - 250 மி
2.கொத்தமல்லி - 100 கிராம்
3.மிளகு  - 25 கிராம்
4.பனை வெல்லம் - தேவையான அளவு சுவைக்காக

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

👉பிறகு  கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

👉பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.

👉இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.

👉பிறகு 250 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

👉மேலும் இதனுடன் பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

👉இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை உணவுக்கு முன் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு முற்றிலுமாக நீங்கும்.

Monday 29 March 2021

diabetic kidney failure

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை
. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர்.
 ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... 
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார்.
 மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.  
"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க...