Friday 19 June 2015

Well ( kinaru)

18 Nov 2010
தோழி at 11/18/2010
மனையடி சாத்திரமும்
கிணறும்!
மனையில் வீடு அமைக்க அடிக்கல்
நாட்டுவதில் துவங்கி வீட்டின்
அமைவு, கிணறு தோண்டும் இடம்,
கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை
அனைத்து விவரங்களும் சித்தர்களின்
பாடல்களில் காணக்
கிடைக்கிறது.முதலில் கிணற்றை
அமைத்த பின்னரே மனை அமைக்கும்
வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்
என்கின்றனர்.
கிணறு அமைப்பது என்பது அத்தனை
எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து
உழைத்து உருவாக்கிட வேண்டிய
ஒன்று. ஒரு வேளை தோண்டிய
கிணற்றில் தண்ணீர் வராமல்
போய்விட்டால் அத்தனை உழைப்பும்
வீணாகி விடும். அதே போல்
கோடையில் கிணற்றில் நீர் வறண்டு
போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால்
இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான
தீர்வுகளை சித்தர்கள் அருளிச்
சென்றிருக்கின்றனர்.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு
பகுதியில் அதிகளவு பச்சை பசேலென
புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர்.
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி?
அதற்கும் சித்தர்கள் தீர்வு
சொல்கிறார்கள்...
நவதானியங்களை அரைத்து கிணறு
வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை
சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள், அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு
வெட்டினால் தூய சிறப்பான நன்னீர்
கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு
கொண்டாயிற்று....
கோடைகாலத்திலும் வற்றாத நீர்
ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று
அறிவது எப்படி?
அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும் அடைத்து
விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த
நிலத்திட்க்குள் மேய விட வேண்டும்.
பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால்
மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும் இடங்களை
நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால்
அவை ஒரே இடத்தில் தொடர்ந்து
படுக்குமாம். அந்த இடத்தில்
தோண்டினால் வற்றாத நீரூற்றுக்
கிடைக்குமாம்.
சுவாரசியமான
தகவல்கள்தானே!...இப்படியான பல
தகவல்கள் சித்தர்களின் பாடல்களில்
காணக் கிடைக்கிறது. இவை
முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள்
மேற்கொள்ளப் படுதல் அவசியம்.

Pachai payaru(moong dall )

உடல் எடையை குறைக்க வேண்டுமா?
பச்சை பயிறு சாப்பிடுங்க..
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும்
போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு
கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான
பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை
தவறாமல் வாரம் ஒருமுறை
உட்கொண்டு வந்தால், அதில்
நிறைந்துள்ள சத்துக்களால் பல
நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும்
நோய்களை குணப்படுத்துவதோடு,
சருமம் மற்றும் கூந்தல்
பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன்
வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக்
குறைக்கவும் பச்சை பயறு
உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை
பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில்
சேர்த்து வாருங்கள்.
சத்துக்கள் நிறைந்தது
பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக
உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து
குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால்,
அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து
வாருங்கள். இதனால் உடலுக்கு
வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து,
இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில்
இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில்
இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
அன்றாடம் வெளியில் அதிகம்
சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு
அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால்,
சரும புற்றுநோய் ஏற்படுவதைத்
தடுக்கலாம்.
எடையைக் குறைக்கும்
உடல் பருமனைக் குறைக்கவும், உடல்
எடையை சீராக பராமரிக்கவும், பச்சை
பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக
வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க
முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும்
போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை
பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு
வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன்,
உடல் எடையும் கட்டுப்பாட்டுடன்
இருக்கும்.

Is it boy or girl ?

விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில்
கருவில் இருக்கும் குழந்தையை
கண்டுபிடிக்க கருவானது ஓரளவு
வளரும் வரை காத்திருக்க வேண்டும்,
அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க
முடியும், மனிதன் செய்யும் சில
தவறுகளால் அரசு அதையும் தடை
செய்து விட்டது. ஆனால் அறிவியல்
வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு
உண்டான கணத்தில் இருந்தே
குழந்தையின் பாலினத்தை
துல்லியமாக கண்டறியும் முறையை
நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.
ஒரு பெண் மூச்சு விடும் நாசியின்
பக்கங்களை வைத்தும், அந்த பெண்
குழந்தையை சுமக்கும் போது எந்த
கையை ஊன்றி மேலே எழுகிறார்
என்பதை வைத்தும் இன்னும் இது
போன்று நிறைய முறைகளில் இதற்கு
முன் இருந்தவர்கள் கணித்தனர்.
"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட்
சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே
யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது
பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக்
குருடு வூமை"
என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில்
கரு உண்டான காலத்தில் நாசியில்
ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே
குழந்தையின் பாலினத்தை நம்மால்
கணிக்க முடியும் என்பது தான் இந்த
பாடலின் மூலம் நாம் தெரிந்து
கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக்
காற்றானது வலது புற நாசியில்
ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது
புற நாசியில் ஓடினால் பெண்
குழந்தை எனவும், மூச்சுக்காற்று
சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும்
குழந்தை குருடு, ஊமை போன்ற
குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே
இதன் விளக்கம். இதே போன்று குழந்தை
கருவில் உண்டான தேதியில் இருந்து
என்னென்ன உறுப்புகள் எந்தெந்த
மாதங்களில் உருவாகும்,கருவில்
குழந்தை உருவான தேதில் இருந்து
பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு,
கருச் சிதைவு, மூளை வளர்ச்சி
இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக
பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை
துல்லியமாக கொடுத்துச்
சென்றுள்ளனர், மேற்கத்திய
மோகத்தினாலும், தமிழை தாழ்வாக
நினைப்பதாலும், கடவுள் மறுப்பு
கொள்கைகளினால் சித்தர் பாடல்களை
நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற
அறிய விடயங்களை நாம் தவற
விடுகின்றோம். இவை அனைத்தும்
அவர்களின் மெய்ஞானத்தால்
தோன்றியவையே, சித்தர் பாடல்களை
ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக
அளவில் தமிழ் மக்களுக்கு மேலும்
அங்கிகார

How to treat sugar

Plan 3.
#சித்தர்கள் #நீரிழிவு #நோயை விரட்ட குறிப்புகளை கொடுத்துள்ளனர்.!!!

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் சக்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...

ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;
''நல்ல மணிச்சம்பா
நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லும் மிகுந்த சுகங்
கொண்டளிக்கும் -மெல்லப்
பசியளிக்கும் மூத்தோரைப்
பாலர்களை நாளும்
முசியாமலே நன்கு
வளர்க்கு முன்'' - எனக் குறிப்பிடுகிறது.

மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல சுகத்தை தரும்.கிரமமான பசியை உண்டாக்கும்.இனி அரிசி சாதத்தை விடுங்க.சம்பா அரிசியை பொங்கி சாப்பிடுங்க..! நிறைய நடங்க...நடைப்பயிற்சி அவசியம்...தியான
ம்,யோகா முயற்சி செய்யுங்க..சும்மா இருந்ததால்தான் சக்கரை நோய் வந்தது...

இனியும் சும்மா இருந்தால் மிகுந்த வேதனைதான்..

இனிச் சம்பா இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி.

கோதையர் கலவி, போதை,
கொழுத்தமீ னிறைச்சி, போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே' (அகத்தியரால் 1200)

அதாவது பலருடன்/அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.

நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம்/ சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் "சாரம்"' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு "செந்நீர்"' ஆகிறது.

பின் இது "ஊன்" எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் "கொழுப்பாக"' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.

இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மதுமேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

நீரிழிவு நோய்க்கு மருந்து:

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சக்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சக்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள்ளவும்.
5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சக்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.
10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சக்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சக்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சக்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சக்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சக்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சக்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

16. வெந்தயம் – 50 கி, கருஞ்சீரகம் – 25 கி, ஓமம் – 25 கி, சீரகம் – 25 கி, இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். (வறுத்தபின் மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்). தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

17. வறக் கொத்தமல்லி-அரை கிலோ, வெந்தயம் -கால் கிலோ, தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

18. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.அ
ி காலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு காயைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்குகுணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம்.பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். பாகற்காய் நமது நாவுக்குத்தான்க
சப்பே தவிர உடலுக்கு இனிப்பானது! பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாகஇருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாகஇருப்பதைக் கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். புளியுடன்சேர்த்து, பாகற்காயைச் சமைப்பது சிறந்தது.
அனைத்து வகையான பாகற்காயிலும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கசப்புத் தன்மையுடைய வேதிச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
பழுக்காத காய்களிலுள்ள கசப்பான மொமார்டிக்கோசைடுகள், அமினோ அமிலங்கள், ஹைட்ராக்சிக்டிரிப்டமைன்கள், கரான்டின், டையோஸ்ஜெனின், லேனோஸ்டீரால், குக்கூர்பிட்டேசின் போன்ற கசப்பான சத்துக்கள் சர்க்கரை அளவை குறைக்கின்றன. இவை விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் இன்சுலினிற்கு இணையானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
.
இளங்காய் மற்றும் லேசாக பழுத்த பாகற்காய்களை எடுத்து, நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின் சிறு, சிறு துண்டுகளாக மைய வெட்டி, நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் அதே நீருடன் மிக்சியில் போட்டு மைய அரைத்து, பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை 60 முதல் 120 மிலி வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.
சித்த மருந்து உட்கொள்பவர்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டியுள்ளதால் பாகற்காய்க்குப் பதிலாகப் பிஞ்சு பாகலை உட்கொள்ளலாம். இது பத்தியத்திற்கு ஏற்றதாகும். சர்க்கரை நோயாளிகள் ஏற்கனவே தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளுடன் பாகற்காய் கசாயம் அல்லது பாகற்காய் சாறை சேர்த்துக் கொள்ளலாம்.
வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ பாகற்காய் சாறு 10 முதல் 20 மில்லியளவு அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வர, இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வர, கணையம் இன்சுலினை நன்று சுரக்க ஆரம்பிக்கும். நிலப்பாகல் அல்லது மிதிப்பாகலை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம்

19. நாவல் பழத்தில் உள்ள, ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நாவல் பழ கொட்டையும் நல்லது.

20. சக்கரை நோய் உள்ளவர்கள் இரவில் கொய்யா இலையை தண்ணிரில் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணிரை குடித்து வர விரைவில் சர்க்கரை நோயை கட்டுபடுத்தி விடலாம்..

21. சாப்பிடும் முன் கொத்தவரைக்காயை வேக வைத்தோ அல்லது வத்தலாகவோ கூட (வறுத்து) பிசைந்து சாப்பிட்டு விட்டு உங்கள் உணவை தொடருங்கள்.

Plan 2 :
coriander and venthayam
சர்க்கரை நோய் உங்களை விட்டு
ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை
வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி
செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை
பொன்னிறமாக வறுத்து தனித்தையாக
பொடி செய்து இரண்டையும் நன்கு
கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு
டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில்
கொதிக்க வைத்து ஒரு தம்லராக
சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி
மூன்று வேலைகளுக்கு
சாப்பாட்டிற்கு முக்கால் மணி
முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது
முக்கால் மணி நேரம் வேறு எதையும்
(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை
விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள்
ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார
இடைவெளியில் இம்மருந்து
சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும்
பரிசோதனைக்கூட சோதனையில்
உறுதி செய்யுங்களேன்.

Plan 1 : Nila Vembu

சர்க்கரை நோய் பூரண குணம் !!!
This is Fwd msg. ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது