Monday 23 October 2017

Who is healthy

அனவைருக்கும்....பயனுள்ள பதிவு.

நீங்கள் ஆரோக்கியசாலி என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா?இல்லையா? எப்படி தெரிந்துக்கொள்வது? "மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது "சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவரை, "நீ நோயாளிதான்" என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் "தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது "அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்யத்
தூண்டுவது. நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்.
(most affected victims)

நன்கு படித்தவர்கள்....(?),
பணம் படைத்தவர்கள் ....(double income),
புகழடைந்தவர்கள்.
எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
சிறுநீரக நோய் ரீடிங் 1.02, கொழுப்பு அளவு,
உப்பு அளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சிலஅளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம். இத்தகய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".
Our Body mechanism is beyond சயின்ஸ்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.
https://www.facebook.com/groups/siddhar.science

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது.*
*"யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது"* .

உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள *மனிதனும்,வெவ்வேறு தட்பவெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவுபழக்கம், வெவ்வேறு உணவு உண்ணும் முறை, வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு "ஜீன்கட்டமைப்பில் இருக்கிறான்*.

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்", என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது"எப்பேற்பட்ட"முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் "Master check-up" இந்த நூற்றாண்டின் "மாபெரும் வியாபார மோசடி".

அப்படியானால் ஒரு மனிதன் ஆரோக்யமாக இருப்பது, இல்லாதது, எப்படி தெரிந்துக் கொள்வது? வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.
4. தரமான தாம்பத்ய உறவு.

"தரம்" என்ன என்பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன நான்கும் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்யாமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.....நன்றி.

சிந்திப்பவர் மட்டுமே தெளிவு பெறுவர்
https://www.facebook.com/groups/siddhar.science

Sunday 22 October 2017

Chuku copy

தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு பொடிக்கு…
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

Thursday 21 September 2017

Diabetes_ foot wound


சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு   கால்களை விரல்களை வெட்ட வேண்டாம்.   காப்பாற்றுவோம்.!
.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என  ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
.
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
.
மேலும் விபரங்கள் கீழே.!
.
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு   மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
.
காலையும்,விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி .

இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
.
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
.
இதற்க்கு கண்கண்ட மருந்து .
.
ஆவாரம் இலை.
.
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
.
இதுபோல் ஒருநாள் விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
.
இதை அதிகம் பகிா்ந்து பலாின்  கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!
.
நன்றி. Ntamil.com

Thursday 14 September 2017

Face - decese

*முகத்தை வைத்து எட்டு உறுப்புக்களின் பாதிப்பை அறியலாம்?*

தகவல் தந்தவர் ஹீலர் பாஸ்கர் அண்ணா....

நமது உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரிய உடல் உறுப்பு நமது சருமம் தான். நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும். இது குறித்து ஓர் சீனா உடல்நல மேப் ஒன்றும் இருக்கிறது.

சீனர்கள் உடலில் இருக்கும் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும், முக சருமத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் மாற்றத்திற்கும் தொடர்பு உடையதாக நம்புகிறார்கள்.

முகத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் பருக்கள் உண்டாவது, சரும நிறம் மாறுதல், சருமம் தடித்தல் போன்றவற்றை வைத்து நமது உடலில் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகிறது என்பதை அறியலாம் என கருதுகின்றனர்.

இனி, முக சருமத்தில் எந்தெந்த பகுதியில் மாற்றங்கள் உண்டானால், உடலின் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகியிருக்கலாம் என்றும், அதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை குறித்தும் பார்க்கலாம்.

நெற்றி
********

தொடர்பு: சிறுநீரக பை மற்றும் சிறுகுடல் காரணம்:

அதிக கொழுப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு உண்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை, ஆல்கஹால் போன்றவை அஜீரணத்தை உண்டாக்கும். தீர்வு: நிறைய தண்ணீர் பருகுங்கள், ஆல்கஹாலை தவிர்த்துவிடுங்கள், நன்கு தூங்குங்கள்.

புருவங்களுக்கு மத்தியில்
****************************

தொடர்பு: கல்லீரல் காரணம்:

அதிகளவில் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, வயிற்றுக்கு அதிக வேலை கொடுப்பது, சரியான அளவு ஓய்வு எடுக்காமல் இருப்பது. தீர்வு: பசுமை உணவுகள் உண்ணுங்கள், தியானம், யோகா செய்யுங்கள், வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

புருவங்கள்
************

தொடர்பு: சிறுநீரகம் காரணம்:

இதய நலன் குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை, அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது மற்றும் புகைப்பது தீர்வு: மதுவை தவிர்த்துவிடுங்கள், காபி அதிகம் குடிக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மூக்கு
******

தொடர்பு: இதயம் காரணம்:

வாயுத்தொல்லை, இரத்த ஓட்டம் சீரின்மை, குமட்டல், மாசுப்பட்ட காற்று சுவாசித்தல், அதிக இரத்த அழுத்தம். தீர்வு: அடிக்கடி இரத்த அழுத்த பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், கிரீன் டீ பருகுவதால் நச்சுக்களை போக்க முடியும். மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

கன்னங்களுக்கு மேல்
************************

தொடர்பு: நுரையீரல் காரணம்:

புகை பழக்கம், ஆஸ்துமா, மாசுப்பாடு தீர்வு: புகையை தவிர்த்துவிடுங்கள், காற்று மாசுப்பட்டுள்ள இடத்தில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். இன்றிலிருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.

கன்னம்
*********

தொடர்பு: நுரையீரல் மற்றும் சிறுநீரகம் காரணம்:

தவறான உணவு முறை, அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மிகையாக புகைப்பது. தீர்வு: துரித உணவுகளை தவிர்க்க வேண்டும், காஸ்மெடிக் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.

வாய் மற்றும் கீழ் தாடை
*************************

தொடர்பு: வயிறு காரணம்:

கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது, ஆல்கஹால், அதிகமாக காபி பருகுவது, மன அழுத்தம், நள்ளிரவு வரை உறங்காமல் இருப்பது. தீர்வு: உடலை சமநிலைப்படுத்துங்கள், இதய நலனை பேணிக்காக்க வேண்டும், நிறைய பழங்கள் உண்ணுங்கள், இது நீண்ட நாள் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள்.

தாடை மற்றும் கழுத்து
************************

தொடர்பு: ஹார்மோன்கள் காரணம்:

உடலில் நீர்வறட்சி, அதிக உப்பு சேர்த்து உணவு உண்ணுதல், அதிகமாக காபி குடித்தால், காரம், மசாலா உணவுகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல். தீர்வு: தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், காபி, மசாலா, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

Saturday 9 September 2017

Diabetes- White sugar connection research

சர்க்கரை நோய் எப்படி வருகிறது ஒரு
யதார்த்த உண்மை செய்தி...!

சர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச்
சொல்கிறேன். சர்க்கரை நோயினால்
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள்
மடிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1921-ல்
கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக்
பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட் உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், நாயின் கணையத்திலிருந்து 'இன்சுலின்’ என்கிற ஹார்மோனை
வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார். இந்தச்
சாதனை, மருத்துவ உலகில் ஒரு மகத்தான
புரட்சியாக அமைந்தது. பின்னர், பசு, பன்றி
ஆகியவற்றின் கணையத்திலிருந்தும்
இன்சுலின் எடுக்கப்பட்டு, தற்போது மரபணு
தொழில்நுட்பத்தில் (Genetic Engineering)
உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும்
கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி
வருகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக,
1923-ல் தன்னுடைய 32-வது வயதிலேயே
நோபல் பரிசு பெற்றார் டாக்டர் பான்டிங்.
ஆனால், இவர் செய்த இன்னொரு மிக
முக்கியமான ஆராய்ச்சியை உலகம்
மறந்துவிட்டது - அல்லது மறைக்கப்பட்டுவி
ட்டது என்பதுதான் வேதனையான விஷயம்.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்த பண்ணையார்கள்/ஜமீன்தார்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு, தங்களின் சமுதாய
அந்தஸ்துக்கு ஏற்ப, வெள்ளைச் சீனியையே
உபயோகித்தார்கள். ஆனால், இவர்களின்
கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த
கூலித்தொழிலாளிகளோ, தங்கள் சக்திக்கு
ஏற்ப கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைத்தான் சொந்தத்துக்கு உபயோகித்தார்கள்.

பண்ணையார்கள்/ஜமீன்தார்கள்
குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின்
தாக்கம் அதிகமாகவும், கூலித்தொழிலாளிக
ளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் குறைவாகவும் இருப்பதை டாக்டர் பான்டிங் கண்டுபிடித்தார். இந்த அரிய
கண்டுபிடிப்பு... உலகத்தின் பார்வையில்
படாமல் ஏனோ இருட்டடிப்பு செய்யப்பட்டு,
நூல் நிலையங்களுக்குள் வரலாற்றுச்
சுவடிகளில் புதைக்கப்பட்டுவிட்டது.

பான்டிங்கின் இன்சுலின் கண்டுபிடிப்புக்குக்
கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம்,
'வெள்ளைச் சீனியால் சர்க்கரைநோய் அதிகம் வரும், ஆனால்... கருப்பட்டி, வெல்லம்
போன்றவற்றைச் சாப்பிட்டால் பாதிப்பில்லை'
என்கிற அவரின் அரிய கண்டுபிடிப்புக்கும்
கொடுக்கப்பட்டிருந்தால், இத்தனை கோடி
பேருக்கு சர்க்கரை நோயே வந்திருக்காது
என்று எனக்குத் தோன்றுகிறது! காரணம், சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயாகவே இதுவரை கருதப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி
சாமான்யர்களுக்கும் அந்நோய் வருவதைக்
காண்கிறோம். சாமான்யர்களும் கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைச் சீனியையே உபயோகப்படுத்த ஆரம்பித்ததன்
விளைவுதான் இது என்பதைத்தானே பான்டிங் அப்போதே தன் ஆராய்ச்சியில் கூறினார்!

இனி, இன்றைய ஆராய்ச்சிக்கு வருவோம்.

அமெரிக்காவில், கலிஃபோர்னியா
பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் அகச்
சுரப்பியல் (Pediatric Endocrinology)
நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராபர்ட்
லஸ்டிக் என்பவர், சமீபத்தில் ஓர்
ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் ஊர்
டாக்டர் சஞ்சய் பாசுவும் இந்த ஆராய்ச்சி யில்
இணைந்து பணியாற்றினார். 2000 - 2010
ஆண்டுகள் வரை, 175 நாடுகளில்
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில்,
ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும்/
இறக்குமதியாகும்/விற்பனையாகும்
சர்க்கரையின் அளவுக்கும், சர்க்கரை நோய்த்
தாக்கத் துக்கும் உள்ள தொடர்புதான் இந்த
ஆராய்ச்சியின் கருப்பொருள். ஒவ்வொரு 150
கலோரி சர்க்கரைக்கும் (அதாவது 9 ஸ்பூன்
சர்க்கரை அல்லது ஒரு கோலா பாட்டிலில்
உள்ள சர்க்கரை) சர்க்கரை நோயின் தாக்கம் 1 சதவிகிதம் அதிகரிக்கிறது.

அதேசமயம், மற்ற வகை உணவுகளிலிருந்து
கிடைக்கும் ஒவ்வொரு 150 கலோரிக்கும்
சர்க்கரை நோயின் தாக்கம் வெறும் 0.1
சதவிகிதம்தான் கூடுகிறது. இந்தக்
கண்டுபிடிப்புகளை 'நியூயார்க் டைம்ஸ்’
போன்ற பிரபல பத்திரிகைகள் பிரசுரித்தன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர்
வால்டர் வில்லட், யேல் பல்கலைக்கழகத்தின்
டாக்டர் டேவின் காட்ஸ் ஆகியோரும்
இவருடைய கருத்துக்களை ஆதரித்தனர்.
ஆனால், எதிர்பார்த்தபடியே மேலை நாட்டின்
சக்திவாய்ந்த சர்க்கரை ஆலை அதிபர்கள்,
கோலா, சாக்லேட் நிறுவனங்கள் இந்தக்
கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.

இவர்களின் ராட்சத பணபலத்துக்கு முன்பாக
அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகமும்,
பிரிட்டிஷ் சர்க்கரை நோய்க் கழகமும்
அடிபணிந்தன. இன்றைய நவீன மருத்துவத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக்கொண்ட நாங்களும், ஆங்கிலேயர்களின் கருத்தையே
வேதவாக்காக எடுத்துக் கொண்டு,
சர்க்கரையின் பல்வேறு கேடுகளையும்
உணராமல்/கண்டுகொள்ளாமல்
மூடிமறைக்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆனால், டாக்டர் ராபர்ட் லஸ்டிக் இதோடு
விடவில்லை. அவருடைய ஆராய்ச்சியில்
கலந்துகொண்ட 175 நாடுகளில், 4 நாடுகள்
சுதாரித்துக்கொண்டன. தென்கொரியா,
பங்களாதேஷ், அல்பேனியா, நைஜீரியா அகிய அந்த 4 நாடுகளும் சர்க்கரை இறக்குமதியை/ இருப்பை வெகுவாகக் குறைத்தன. விளைவு உடனே தெரிய ஆரம்பித்தது. இந்த 4 நாடுகளிலும் புதிய சர்க்கரை நோயாளிகளின்
எண்ணிக்கை வெகுவாகக் குறைய
ஆரம்பித்தது என்கிற உண்மையை, டாக்டர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுவரை அவர் சொன்னதெல்லாம்,
காதுகேளாதவர்களின் காதில் ஊதிய சங்கு
என்று இருந்த நிலையில், சிலருக்கு மட்டும்
இந்த அபாயச் சங்கு ஒலி மிகவும் தெளிவாகக் கேட்டது. ஆம்... அமெரிக்க இதயநோய்க் கழகம் (American Heart Association) இவருடைய
கண்டுபிடிப்புகளை முழுமனதோடு
ஏற்றுக்கொண்டது. அதோடு நின்றுவிடாமல்
அமெரிக்க மக்களுக்கு ஓர் பரிந்துரையும்
வெளியிட்டது. 'ஆண்கள் 9 ஸ்பூன் சீனியும்,
பெண்கள் 6 ஸ்பூன் சீனியும் மட்டுமே
தினமும் உணவில் சேர்க்க வேண்டும்’ என்பதே அது. அதென்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி ஒரு வித்தியாசம்? சர்க்கரையால் ஏற்படும் உடல்பருமன் நோயின் தாக்கம் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகம்
என்பதே காரணம்.

உலக சுகாதார மையமும் (WHO -World
Health Organization) சற்று விழித்துக் கொண்டது.

உணவில் சுத்த சர்க்கரையின் அளவு 10
சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்க
வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அது
எடுத்தது.

'6, 9 ஸ்பூன் சீனிதானே? அது ஒன்றும் பெரிய
விஷயமில்லை. நம் ஊரில் காபி, டீயில் 2
ஸ்பூன் சர்க்கரை வீதம் 2 - 3 வேளை
எடுத்தாலும் இந்த உச்சவரம்பைத் தாண்டாது.

அதனால், சீனியினால் நேரடி பாதிப்பு நம் ஊர் மக்களுக்குக் கிடையாது’ என்று பிரபல
சர்க்கரைநோய் நிபுணர்களே இப்போதும்
கூறிவருகிறார்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் எல்லோரும்
கவனிக்கத் தவறும் உண்மை என்னவென்றால் - சர்க்கரை மாறுவேஷத்தில் பல உணவுகளில்
ஒளிந்திருக்கிறது (hidden sugar) என்பதுதான்.

கோலா பானங்கள், சாக்லேட்டுகள், பீட்ஸா,
பர்கர் போன்ற துரித உணவுகள், ஜாம்,
ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள் இன்னும்
இத்யாதி இத்யாதி... எல்லாவற்றிலும்
ஒளிந்திருப்பது சீனிதானே? இவற்றை
அன்றாடம் உண்ணும் இன்றைய
குழந்தைகளும் இளையதலைமுறையினரும் உடல் பருமன் நோய்க்கும், மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய்க்கும் ஆளாவதில் என்ன ஆச்சர்யம்?

சிங்கப்பூர் அரசாங்கம் 1991-ல் ஓர் அதிரடிச்
சட்டம் இயற்றியது. பள்ளிகள், இளைஞர்கள்
விடுதிகள் போன்ற இடங்களைச் சுற்றி கோலா பானங்களும், மேலே குறிப்பிட்ட மற்ற இனிப்பு பதார்த்தங்களும் விற்பனை செய்வதை தடை செய்தது அந்தச் சட்டம். அமெரிக்காவில், நியூயார்க், கலிஃபோர்னியா மற்றும் பல மாகாணங்களில் இதே மாதிரிச் சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. நம் மத்திய அரசும் சென்ற மாதம் தன் பங்குக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டது.

'கல்வி நிறுவனங்கள் அருகில் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளும் பானங்களும் விற்பனை செய்வது தடைசெய்யப்படும்’ என்றது அந்த அறிவிப்பு மொத்தத்தில் பேரலவுக்கு அரசால் சாத்தானை அழிக்க முடியவில்லை நம்மால் முடிந்தவறை
தடுப்போம்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

Sunday 3 September 2017

Tamil nos

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
----------------------------
*இந்த செய்தியை நம் தமிழ்  நண்பர்களுக்கு அவசியம் பகிரவும்🚗🔥

Train - aluminium foil

ரயிலில் கிடைத்த பாடம்...பளார் பதிவு...

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது.

நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம்.

படியுங்கள்… நமது எதிர்மறை எண்ணங்களுக்கு இந்த பதிவு விடையாக அமைந்தால் நல்லதே...

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது.

இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது.

அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன்.

ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள்.

இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் .

சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை ,

ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை ,

எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் .

இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.

“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”

“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”

“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்

“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் .

அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்.

ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் . இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது...

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”

“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்

“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,

“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்

“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”

சிரிப்பு வந்தது எனக்கு...

“டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் ,

இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது.

“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.

“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .

திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்

“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது ,

ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்

“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .

அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் .

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ 4,000), எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ 32,000), மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ 2,40,000) ,செலவு நாப்பதாயிரம் (- ரூ 40,000)) , வருமானம் இரண்டு லட்சம் (ரூ 2,00,000)  , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ 24,00,000) .

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .
மலைத்து நின்றேன்.

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்.

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன்.

இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.
=================================================================
பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார்.

மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை.

ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.