Friday, 19 June 2015

Is it boy or girl ?

விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில்
கருவில் இருக்கும் குழந்தையை
கண்டுபிடிக்க கருவானது ஓரளவு
வளரும் வரை காத்திருக்க வேண்டும்,
அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க
முடியும், மனிதன் செய்யும் சில
தவறுகளால் அரசு அதையும் தடை
செய்து விட்டது. ஆனால் அறிவியல்
வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு
உண்டான கணத்தில் இருந்தே
குழந்தையின் பாலினத்தை
துல்லியமாக கண்டறியும் முறையை
நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.
ஒரு பெண் மூச்சு விடும் நாசியின்
பக்கங்களை வைத்தும், அந்த பெண்
குழந்தையை சுமக்கும் போது எந்த
கையை ஊன்றி மேலே எழுகிறார்
என்பதை வைத்தும் இன்னும் இது
போன்று நிறைய முறைகளில் இதற்கு
முன் இருந்தவர்கள் கணித்தனர்.
"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட்
சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே
யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது
பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக்
குருடு வூமை"
என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில்
கரு உண்டான காலத்தில் நாசியில்
ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே
குழந்தையின் பாலினத்தை நம்மால்
கணிக்க முடியும் என்பது தான் இந்த
பாடலின் மூலம் நாம் தெரிந்து
கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக்
காற்றானது வலது புற நாசியில்
ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது
புற நாசியில் ஓடினால் பெண்
குழந்தை எனவும், மூச்சுக்காற்று
சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும்
குழந்தை குருடு, ஊமை போன்ற
குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே
இதன் விளக்கம். இதே போன்று குழந்தை
கருவில் உண்டான தேதியில் இருந்து
என்னென்ன உறுப்புகள் எந்தெந்த
மாதங்களில் உருவாகும்,கருவில்
குழந்தை உருவான தேதில் இருந்து
பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு,
கருச் சிதைவு, மூளை வளர்ச்சி
இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக
பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை
துல்லியமாக கொடுத்துச்
சென்றுள்ளனர், மேற்கத்திய
மோகத்தினாலும், தமிழை தாழ்வாக
நினைப்பதாலும், கடவுள் மறுப்பு
கொள்கைகளினால் சித்தர் பாடல்களை
நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற
அறிய விடயங்களை நாம் தவற
விடுகின்றோம். இவை அனைத்தும்
அவர்களின் மெய்ஞானத்தால்
தோன்றியவையே, சித்தர் பாடல்களை
ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக
அளவில் தமிழ் மக்களுக்கு மேலும்
அங்கிகார

No comments:

Post a Comment