Friday, 23 January 2015

Kidney stone

1) இது தமிழ்
சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்
(அறுவை சிகிச்சை) இல்லாமல்
இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
ஆண் பெண் என்ற
பாகுபாடின்றி அனைவருக்கும்
பகிருங்கள்.!
சீறுநீர்
கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம்
தான் குணப்படுத்த முடியும் என்ற
பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த
அறுவை சிகிச்சையும் இல்லாமல்
பணச்செலவே இல்லாமல்
இயற்கை முறைப்படி உடனடியாக
குணப்படுத்தலாம். குணமடைந்தவரின்
சிறப்பு பேட்டியையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த
போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள்
எளிமையான இயற்கை மருத்துவ
முறையை நமக்கு அளித்தனர்.
மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த
வேண்டும் அடுத்த மனிதனுக்கும்
தன்னால் முடிந்த உதவியை செய்ய
வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன்
ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில்
ஒருவருக்கொருவர்
பொறாமை கொண்டு பணத்துக்காக
சிதைந்து விட்டது.
இயற்கை மருத்துவம் என்றால்
உணவே மருந்து,மருந்தே உணவு என்ற
நோக்கத்தில் நாம்
இதை இப்போது தூசு தட்டி படிக்க
ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம்
வல்ல இறைவனின் ஆசியும்
அனைத்து சித்தர்களின் ஆசியும்
நடத்துதலும் எங்களுக்கு தேவை.
பெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/
jj18aM
படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர்
பெ.முத்துகிருஷ்ணன் இவர்
ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர்
சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும்
அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல்
மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர்
வலி தாங்க முடியாமல்
மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன்
(Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில்
கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக
ஆபரேஷன் செய்ய வேண்டும்
என்று கூறி அனுப்பி விட்டனர். இவர்
மேலும் ஒரு மருத்துவமனைக்கு
சென்று அங்கும் ஸ்கேன்
செய்து பார்த்திருக்கிறார்.
இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக
இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள்
கழித்து வைத்துக்கொள்லலாம்
அதுவரை இந்த
மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற
கூறி மருத்துவர்
இவரை அனுப்பி விட்டனர்.
அடுத்த நாள் காலையில் நாம்
இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க
முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம்
பார்க்க முடியாமல்
ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த
போது ஒரு வழி கிடைத்தது.
அதாவது குறைந்தது உங்களின் உயர
அளவுள்ள வாழைத்தார் போடாத
வாழை மரத்தை, உங்களின்
இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக
வெட்டி விடவும்.
இப்போது வாழைப்பட்டைகளுக
்கு நடுவே, வாழைத்
தண்டு என்று சொல்லப்படும் அதன்
குருத்து இருக்கும்.
இக்குருத்தை உங்களது கையின்
நடு விரல்
நீளத்திற்கு நோண்டி எடுத்து விட
வேண்டும். இவைகளை கட்டாயம்
சூரியனின்
மறைவுக்கு பின்னரே செய்ய
வேண்டும்.
நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://
goo.gl/MweGCq
இப்போது அவ்வாழை மரத்தின்
வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம்
தண்ணீர் அருந்தும் டம்ளர்
அல்லது குவளை போன்று காட்சியளிக்கும்
. இதன் மேலே மாவு சலிக்க
பயன்படுத்தும் நைலானால் ஆன
சல்லடை ஒன்றை மேற்பரப்பில்
வைத்து விடவேண்டும்.
இது தோண்டிய குருத்துக் குழிக்குள்
தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள்
விழாமல் தடுப்பதற்கும், பொழியும்
பனி நீர் அக்குருத்துக் குழிக்குள்
செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற
வேறு எதையும் பயன்படுத்தக்
கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய
உதயத்திற்கு முன் சுமார் 6.30
மணிக்கு பார்த்தால், அக்குருத்துக்
குழிக்குள், அவ்வாழையின் உதிரம்
என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர்
ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.
நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://
goo.gl/fZtBlH
அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும்
குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க
வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன்
எதையும் சாப்பிடக் கூடாது.
சரியாக
ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப
குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க
வேண்டும். பின் அரை மணி நேரம்
கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.
மேலே நாம் கூறியது போலவே நண்பர்
முத்துகிருஷ்ணன் முந்தைய நாள்
இரவு வெட்டி வைத்துள்ளார்.
விடியும் வரை வலியால் தூங்காமல்
அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள்
அதிகாலை 7
மணிக்கு சாற்றை குடித்துள்ளார்.
சரியாக 9 மணிக்கு தண்ணீரும்
குடித்துள்ளார்.
வலி குறையத்தொடங்கிய
தை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம்
1 மணிக்கு வலி சுத்தமாக
அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும்
போது இருந்த வலி அவரிடம்
இப்போது இல்லை.
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள்
மூன்று நாள் சாற்றைக்
குடிக்கும்படி கூறினோம் 5 நாள்
கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிற
ார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும்
இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல
அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
இன்னும் பல மருத்துவ
தகவல்களுக்கு இணைந்திருங்கள

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

2) சிறுநீரகக் கல்...!!!
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

3.
சிறு நீரகக்கல் பிரச்சனையா?
கவலை வேண்டாம். இதை பொருமையுடன் படியுங்கள். நல்ல
மனதிருந்தால் Share செய்யுங்கள்.!
சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும்
எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து
வேளை செய்தால் சிலருக்கு
வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இம்மூலிகை மருந்தை நான் சுமார் 70 பேருக்கும் மேலாக எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த செடி எனது ஊரில் நிறைய விளைந்து கிடக்கிறது.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்
நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள்
ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாக்கலாம்

3.
கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று...

மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

4.

சிறு நீரகக்கல் பிரச்சனையா?
கவலை வேண்டாம். இதை பொ றுமையுடன் படியுங்கள். நல்ல
மனதிருந்தால் Share செய்யுங்கள்.!
சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும்
எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து
வேளை செய்தால் சிலருக்கு
வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இம்மூலிகை மருந்தை நான் சுமார் 70 பேருக்கும் மேலாக எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த செடி எனது ஊரில் நிறைய விளைந்து கிடக்கிறது.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்
நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள்
ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment